ஆப்நகரம்

பாரதி, கண்ணம்மா ஒன்று சேர்த்துவிட்டார்களா? பதறிப்போகும் வெண்பா

பாரதி கண்ணம்மாவில் இன்று பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பிரச்னையை மறந்து ஒன்று சேர்ந்துவிடுவது போல கனவு காண்கிறார் வெண்பா. அதனால் நடு ராத்திரியில் எழுந்து பதறுகிறார்.

Samayam Tamil 12 Aug 2021, 3:23 am
பாரதி கண்ணம்மா வீட்டில் தங்கியது பற்றி வெண்பா ஆரம்பதில் இருந்தே கோபத்துடன் இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்வது போல கனவு வந்து அவருக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது.
Samayam Tamil barathi kannamma serial today venba shocked after dreaming about barathi and kannamma joining
பாரதி, கண்ணம்மா ஒன்று சேர்த்துவிட்டார்களா? பதறிப்போகும் வெண்பா


பாரதி - கண்ணம்மா ஒன்று சேர்ந்து விட்டார்களா?

வெளியில் தூங்கிக்கொண்டிருக்கும் கண்ணம்மாவை எழுப்பி பாரதி பேசுவது போல காட்டப்படுகிறது. நான் கட்டிய தாலி உன்னுடைய கழுத்தில் தான் இன்னும் இருக்கிறது, அதனால் உன் அருகில் வர எனக்கு உரிமை இருக்கிறது தானே என பாரதி கேட்கிறார்.

கண்ணம்மாவும் மாமா என கூப்பிடுகிறார். கண்ணீருடன் இருவரும் கட்டிப்பிடித்து கொள்கிறார்கள். பழைய பிரச்சனைகள் அனைத்தையும் மறந்து விட்டு அவர்கள் ஒன்று சேர்வது போல காட்டப்படுகிறது.

அட கனவா?

எதிர்பார்த்தது போலவே இந்த சம்பவம் கனவு தான். அதுவும் வெண்பாவிற்கு வந்த கனவு. இப்படி ஒரு கனவு வந்ததும் நள்ளிரவில் எழுந்து அவர் பதறுகிறார். இந்த விஷயம் மட்டும் நடந்தால் நான் என்ன செய்வது என்று புலம்புகிறார்.

இது வெறும் கனவு தான் என விளக்கிக் கூறி அவரை தூங்க சொல்கிறார் வேலைக்காரி.

குழந்தைகளுக்கு நல்ல விஷயம் சொல்லித்தரும் கண்ணம்மா

ஹேமா மற்றும் லக்ஷ்மி இருவரையும் அழைத்து சில நல்ல விஷயங்களை சொல்லித் தருகிறார் கண்ணம்மா. ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு எது Good touch, எது bad touch என சொ ல்கிறார். யாராவது ஒருவர் தகாத முறையில் தொட்டு பேசினால் தனக்கு பிடிக்கவில்லை என நேரடியாகக் கூறிவிடுங்கள் என கண்ணம்மா கூறுகிறார்.

காலையில் அதிக நேரம் தூங்கி விட்ட பாரதி லேட்டாக எழுந்து அப்போது தான் வெளியே வருகிறார். கண்ணம்மா குழந்தைகளுக்கு இப்படி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறார். ஹேமாவுக்கு அம்மா இருந்திருந்தால் இப்படித்தான் பார்த்துக்கொண்டு இருப்பார் என அவர் நினைக்கிறார். அதன்பின் அவர் குழந்தைகளுக்கு சில விஷயங்களைச் சொல்கிறார். யாராவது தொடுவது பிடிக்கவில்லை என்றால் 'Dont Touch' தொடாதே என கூறி விடுங்கள் என சொல்கிறார் பாரதி.

கிளம்பும் பாரதி

அதற்குப் பிறகு பாரதி தன் வீட்டுக்கு கிளம்புவதாக சொல்லி தன்னுடைய உடைகளை கேட்கிறார். அதை நேற்று இரவே துவைத்து வைத்து விட்டதாக கூறி எடுத்து வந்து கொடுக்கிறார் கண்ணம்மா. அதை போட்டுக் கொண்டு பாரதி கிளம்பத் தயாராகிறார். அதற்கு முன்பு அவர் போட்டிருந்த லுங்கி மற்றும் டிசர்ட் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்து அனுப்புகிறார் கண்ணம்மா. அதை இங்கு யார் போட போகிறார்கள் என சொல்கிறார்.

பாரதியும் குழந்தைகளுக்கு மட்டும் பாய் சொல்லிட்டு, கண்ணம்மாவிடம் என்ன சொல்வது என தெரியாமல் அமைதியாகவே போகிறார். கண்ணம்மாவும் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவுபெற்றது.

அடுத்த செய்தி