ஆப்நகரம்

கண்ணம்மா உடன் சேர முடிவெடுத்த பாரதி! கனவா இல்லை நனவா?

பாரதி மீண்டும் கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ போவதாக கூறி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.

Samayam Tamil 22 Sep 2021, 11:11 pm
வெண்பா பாரதியை தூண்டி விட்டாலும் அவர் வீட்டிற்கு சென்று எமோஷ்னலாக பேசுகிறார். கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழப்போவதாக கூறுகிறார்.
Samayam Tamil barathi kannamma today episode barathi decides to live with kannamma
கண்ணம்மா உடன் சேர முடிவெடுத்த பாரதி! கனவா இல்லை நனவா?



திருந்திய பாரதியை தூண்டி விடும் வெண்பா

கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லையோ என பாரதிக்கு ஒரு எண்ணம் வருகிறது. அதை எப்படியாவது மாற்ற வேண்டும் என வெண்பா திட்டம் போடுகிறார். கண்ணம்மா பற்றி தவறாக பேசினால் பாரதி டென்ஷன் ஆகி மீண்டும் வெறுக்க தொடங்கி விடுவான் என நினைத்து பேச தொடங்குகிறார்.

கண்ணம்மா கடற்கரையில் ஒரு ஆணுடன் இருந்தது, பாரதியை குடிக்க வைத்துவிட்டு அவர்கள் தனியாக பேசிக்கொண்டு இருந்தது என வெண்பா பழைய விஷயங்களை பற்றி சொல்கிறார். அதனால் பாரதி கோபமாகி அவள் மீது இருக்கும் வெறுப்பு போகவே போகாது என கூறுகிறார்.

பல்லி விழுந்ததால் அஞ்சலி ஷாக்

அஞ்சலி மற்றும் அகிலன் இருவரும் கோவிலில் இருந்து வீட்டுக்கு திரும்பி வருகின்றனர். அகிலன் நடக்க முடியாத நிலையில் இருப்பது பார்த்து அம்மா ஷாக் ஆகிறார். நடந்ததை கேட்டு விட்டு, இப்படி இனி செய்யாதீர்கள் என அட்வைஸ் செய்கிறார்.

அதன் பின் அஞ்சலி வெண்பா கொடுத்த மாத்திரைகளை சாப்பிட போகிறார். அப்போது அவர் மீது பள்ளி விழுகிறது. அதனால் ஷாக் ஆகும் அவர் அதன் பலனை கேலண்டரில் பார்க்கிறார். அதில் ஆபத்து என குறிப்பிடப்பட்டு இருந்ததால் ஷாக் ஆகிறார். என்னவாக இருக்கும் என குழப்பத்தில் இருக்கிறார்.

சேர்ந்து வாழ முடிவெடுத்த பாரதி

பாரதி வீட்டில் அவரது குடும்பத்தினர் எல்லோரையும் அழைத்து பேசுகிறார். கண்ணம்மா மீது நீங்கள் எல்லோரும் இத்தனை வருடங்களாக நம்பிக்கை உடன் இருக்கிறீர்கள். நான் மட்டும் தான் வேறு விதமாக இருந்தேன். இறுதியில் வெறுமை மட்டும் தான் மிஞ்சி இருக்கிறது.

கண்ணம்மா எந்த தவறும் கூட செய்யாமல் இருந்திருக்கலாம், எனக்கு இரண்டு விதமாக தோன்றுகிறது என கூறுகிறார்.

மேலும் மீதம் இருக்கும் காலத்தை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துவிடலாம் என தோன்றுவதாக கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

இப்படி ஒரு ட்விஸ்ட் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காதது தான். இது வெண்பாவின் கனவு என நாளை காட்டாமல் இருந்தால் சரி.

அடுத்த செய்தி