ஆப்நகரம்

Barathi Kannamma: மழை நீரால் தொடங்கிய ரொமான்ஸ்.. பாரதி கண்ணம்மா ஒன்று சேர்வார்களா?

பாரதி கண்ணம்மாவில் இன்று கண்ணம்மா வீட்டுக்குள் மழை நீர் புகுந்துவிடுகிறது. அதை இருவரும் சேர்ந்து வெளியில் எடுத்து ஊற்றுகின்றனர்.

Samayam Tamil 3 Dec 2021, 10:52 am
மழை நீர் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா இடையே ரொமான்ஸ் தொடங்கி இருக்கிறது. அவர்கள் ஒன்று சேர்வார்களா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
Samayam Tamil barathi kannamma today water in kannammas house
Barathi Kannamma: மழை நீரால் தொடங்கிய ரொமான்ஸ்.. பாரதி கண்ணம்மா ஒன்று சேர்வார்களா?



வீட்டுக்குள் மழை நீர்

ஏற்கனவே பாரதி தூக்கம் வரமால் கண்ணம்மா வீட்டின் ஹாலில்படுத்துக்கொண்டிருக்கிறார் . அப்போது திடீரென வீட்டுக்குள் மழை நீர் வந்துவிடுகிறது. பாரதி அதை பார்த்து ஷாக் ஆகிறார்.

அவர் பதறிப்போய் கண்ணம்மாவை எழுப்ப அவர் வந்து தண்ணீரை எடுத்து வெளியில் ஊற்றுகிறார். வேண்டாம் என சொன்னாலும் பாரதி அவருக்கு உதவி செய்கிறார். அந்த நேரத்தில் பாரதி தவறி விழ கண்ணம்மா பிடிக்கிறார்.

அவர்கள் இருவருக்கும் நடுவில் ரொமான்ஸ் தொடங்க மழை காரணமாக அமைந்து இருக்கிறது.

அடுத்த செய்தி