பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா ரோலில் நடித்து வருகிறார் ஃபரினா ஆசாத். சீரியல் பார்க்கும் எல்லோரும் அவரை கண்டிப்பாக திட்டி தீர்த்து இருப்பார்கள். அந்த அளவுக்கு வில்லத்தனமான ரோல் அது. இருப்பினும் ஃபரினா தான் கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தபோது அவருக்கு அனைவரும் வாழ்த்து மழை பொழிந்தனர். அவரை அதற்கு முன்பு திட்டியவர்கள் கூட அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கர்ப்பம் காரணமாக ஃபரினா சீரியலில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்த்து நடித்து வந்தார். பாரதி கண்ணம்மா கதையில் அவர் சிறைக்கு செல்வது போல காட்டப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ஃபரினாவுக்கு பிரசவம் முடிந்திருக்கிறது. அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது. "It's a மகன்" என ஃபரினா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் தற்போது ஃபரினாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஃபரினாவுக்கு பிரசவம் முடிந்திருக்கிறது. அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது. "It's a மகன்" என ஃபரினா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் தற்போது ஃபரினாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.