ஆப்நகரம்

கணவரை பிரிந்து வாழ்கிறாரா பிக்பாஸ் பிரியங்கா..?: பிரபல நடிகர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்வதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 9 Feb 2022, 5:42 pm
தமிழ் சின்னத்திரை விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பெற்றனர்.
Samayam Tamil Priyanka
Priyanka


பிக் பாஸ் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன், பிக் பாஸ் போட்டியாளருமான பிரியங்கா விவகாரத்து செய்துவிட்டார் என்றும் அதற்கான காரணம் குறித்தும் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் , விஜய் டிவியில் வேலை செய்பவர் தான் பிரியங்காவின் கணவர் பிரவீன் குமார்.

டைவர்ஸ் நோட்டீஸோடு வீட்டுக்கு வரும் கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் புதிய திருப்பம்..!

மேலும், விஜய்டிவிக்கு பிரியங்காவை அவர் தான் அடையாளம் காட்டினார். அந்த நன்றி கடனுக்காக தான் பிரியங்கா அவரை திருமனம் செய்துகொண்டார். இருவரும் சில காலம் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால், பிரியங்காவிற்கு அவரை விட பணமும் புகழும் அதிகரித்தது. இதனால் பிரியங்காவிற்கு அகந்தை ஏற்பட்டுவிட்டு இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது.


இவர்கள் இருவரும் பல மாதங்களாக பிரிந்துதான் வாழ்ந்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிரியங்கா அங்கும் கணவர் பற்றி எதுவும் பேசவில்லை. அங்கிருந்து வந்த பின்னரும் நேராக தாய் வீட்டுக்குத் தான் சென்றாரே தவிர கணவர் வீட்டிற்கு செல்லவில்லை இவ்வாறு கூறியுள்ளார் ரங்கநாதன். அவரின் இந்த பேட்டி தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி