ஆப்நகரம்

Bharathi Kannamma: ஹேமா கேட்ட அடுக்கடுக்கான கேள்விகள்.. ஆடிப்போன பாரதி.!

பாரதி கண்ணம்மா நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 23 Jun 2022, 8:55 am
காலையிலே ரோஹித் விநாயகர் பாட்டை அதிக சத்தத்துடன் வைத்து சாமி கும்பிட்டு கொண்டிருக்கிறான். இதனால் பாதி தூக்கத்திலிருந்தே எழும் வெண்பா, சாந்தியையும் எழுப்பி இங்க எங்கடி இவ்வளவு சத்தத்தோட பாட்டு கேட்குது என கேட்கிறாள். அதற்கு சாந்தி நம்ம வீட்டு பக்கத்துல கோயிலே இல்லையேம்மா என சொல்ல இருவரும் கீழே வந்து பார்க்கின்றனர்.
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா


அங்கு ரோஹித் பாட்டை போட்டு கேட்டு கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகும் வெண்பா, சவுண்ட் கம்மியா வைச்சு உன்னால சாமி கும்பிட முடியாதா என திட்டுகிறாள். அதற்கு அவன் உன்னோட சின்ன இதயத்துல இடம் பிடிக்க, இவ்வளவு சத்தத்தோட பாட்டு போடனும் என அவளை கடுப்பேற்றி விட்டு அங்கிருந்து போகிறான். இவனை மட்டும் சமாளிக்கவே முடியலை என சாந்தியிடம் கூறி கோபப்படுகிறாள் வெண்பா.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனிடையில் விக்ரமை பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு இருவர் வருகின்றனர். அவர்களை கண்ணம்மாவிடம் அறிமுகம் செய்து வைக்கும் விக்ரம், இவுங்க எனக்கு சௌந்தர்யா, வேணுவோட காலேஜ் புரொபசர். இவுங்கள கேட்காம நாங்க எதுவுமே பண்ண மாட்டோம். சில கெல்த் பிராப்ளம் இவுங்களுக்கு. இங்க நல்லபடியா வைச்சு பார்த்துக்கணும் என சொல்கிறான் விக்ரம்.

இந்தப்பக்கம் பாரதி ஹேமாவை அழைத்து கொண்டு வெளியில் வருகிறான். அங்கு வந்தும் அவள் யாரா நீங்க டிவோர்ஸ் பண்ண போறீங்க என கேட்க, உனக்கு இதெல்லாம் யார் சொல்லி கொடுக்கிறது என கேட்கிறான். அதற்கு அவள் யாரும் சொல்லலை. நீங்கதான் அன்னைக்கு வொயிட் ஷர்ட் போட்ட அங்கிள் கூட பேசிட்டு இருந்தீங்க. கண்டிப்பா டிவோர்ஸ் வேணும் சொன்னீங்க.

Bharathi Kannamma: கண்ணம்மாவை திட்டி தீர்த்த பாரதி.. கதறி அழுத வெண்பா.!

யாருக்கு டிவோர்ஸ் கொடுக்க போறீங்க சொல்லுங்க என கேட்டு அழுகிறாள் ஹேமா. அவளை சமாதானப்படுத்துகிறான் பாரதி. இதனிடையில் லட்சுமிக்கு சாப்படு கொடுக்க சௌந்தர்யா ஸ்கூலுக்கு வருகிறாள். அவளிடம் எப்படியாவது அப்பா, அம்மாவுக்கு டிவோர்ஸ் கொடுக்காம பண்ணுங்க என கேட்டு சண்டை போடுகிறாள். சௌந்தர்யாவும் நான் பார்த்து கொள்கிறேன் என அவளை சமாதானம் செய்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி