ஆப்நகரம்

Bharathi Kannamma: வெண்பா, சாந்தி போட்ட பலே திட்டம்.. அதிர்ச்சியில் ரோஹித்.!

பாரதி கண்ணம்மா நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 30 Jun 2022, 9:19 am
ரோஹித் பணம் கேட்க ஷர்மிளா அவன் கேட்ட பணத்தை அனுப்பி வைக்கிறாள். இந்தப்பக்கம் சாந்தி இதையெல்லாம் ஒட்டு கேட்டு வந்து அப்படியே வெண்பாவிடம் சொல்கிறாள். உடனே அம்மாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுங்கம்மா என அவள் கூறும்போது, ஏற்கனவே ரெண்டு மாப்பிள்ளையை ஓட விட்டதால நம்ம அவனை பற்றி சொன்னா அம்மா நம்ப மாட்டாங்க என வெண்பா சொல்கிறாள்.
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா


அப்போது ரோஹித்தும் பணத்தை பிரெண்டிடம் கொடுக்க கிளம்பி கீழே வருகிறான். அவளிடம் ஒரு சின்ன புரோஜெக்ட். எப்பவும் பெரிய புரோஜெக்ட் மட்டும் தான் எடுப்பேன். அப்போ அப்போ பிரெண்ட்ஸ்காக இப்படி சின்ன வேலையும் பார்க்குற மாதிரி இருக்கு என பீலா விடுகிறான். டைம் ஆகிருச்சு என சொல்லி அவன் கிளம்ப, அவனை இன்னைக்கு பாலோ பண்ணி உண்மையை கண்டு பிடிக்கிறோம் என்கிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதனை தொடர்ந்து ரோஹித் காரை பின் தொடர்ந்து வெண்பாவும், சாந்தியும் கிளம்புகின்றனர். இன்னைக்கு உன்னோட முழு பெயர், குடும்பம், ஜாதகம் எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறேன் என சாந்தியிடம் சொல்லி கொண்டே கிளம்புகிறான். அப்போது போன் வர்ற வெண்பா அட்டெண்ட் பண்ணி பேசுகிறாள். பைனான்ஸ் கம்பெனியில் இருந்து போன் வரவும் அவள் திட்டி போனை வைக்கிறாள். அதற்குள் ரோஹித் செல்லும் காரை மிஸ் பண்ணி விடுகிறாள் வெண்பா.

இதனிடையில் ஹாஸ்பிட்டலில் இருக்கும் தனது ஆசிரியரை பார்க்க சௌந்தர்யா அகிலனுடன் வருகிறாள். அங்கு அவர்கள் தன்னுடைய பிள்ளைகள், பேரன், பேத்தி பற்றி வருத்தமாக பேசி கொண்டிருக்கும் போது கண்ணம்மா லஷ்மி, ஹேமாவுடன் அங்கு வருகிறாள். அவர்களை பார்த்து ரெண்டு பேரும் ட்வின்ஸ்ஸா என கேட்க, சௌந்தர்யா இவ என்னோட பேத்தி என அறிமுகம் செய்து வைக்கிறாள்.

உன் மகன் ஒன்னும் உத்தமன் கிடையாது: ரகசியத்தை போட்டுடைத்த கோபியின் அப்பா.!

ஹேமாவை கை காட்டி தயக்கத்துடன் நிற்க, இது என்னோட பொண்ணு என கண்ணம்மா சொல்கிறாள். இதனிடையில் பணத்துடன் தனது பிரெண்ட்டை பார்க்க ரோஹித் வருகிறான். அவனிடம் கொண்டு வந்த பணத்தை கொடுக்க, அதற்கு அவன் பிரெண்ட் உனக்கு காலைல போன் பண்ணேன். வேற யாரோ எடுத்தாங்க. எதுவும் பிரச்சனை இல்லைல என கேட்க, ரோஹித் ஷாக்காகிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி