ஆப்நகரம்

Bharathi Kannamma: வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை: விஷ பாட்டிலுடன் பாரதி.!

பாரதி கண்ணம்மா நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 30 Nov 2022, 10:33 am
ரடிவுகளிடமிருந்து காப்பாற்றப்பட்ட ஹேமாவிற்கு தலையில் அடிப்பட்டிருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். உடனே அவளை ஹாஸ்பிட்டல் அழைத்து வருகின்றனர். அங்கு ஹேமாவை ஐசியூவில் அட்மிட் செய்துவிட்டு பதட்டத்தில் இருக்கின்றனர் அனைவரும். சௌந்தர்யா நடந்ததை நினைத்து புலம்பி கொண்டிருக்க, அப்போது வேணு அங்கு வருகிறார்.
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா


அவனிடம் சௌந்தர்யா அழுது புலம்ப, ஹேமாவை ஏதோ டிராக்ல ஏத்திட்டு போறாங்கன்னு அகிலன் சொன்னா. எங்கயோ தொலைஞ்சு போக பார்த்த ஹேமா இப்போ நம்மகூட இருக்கா. பெரிசா நடக்க இருந்தது. இப்போ இதோட முடிஞ்சுருச்சு. கவலைப்படாம இரு. ஹேமாவுக்கு எதுவும் ஆகாத என சமாதானம் சொல்கிறாள். அப்போது லஷ்மியும் அங்கு வருகிறாள். ஹேமாவின் நிலையை பார்த்து கண்ணம்மாவிடம் கதறி அழுகிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்பக்கம் பாரதி ரிசல்ட் வாங்க தயாராகிறான். நான் வாழ்வதும் சாவதும் கண்ணம்மா கையில் தான் இருக்கிறது. டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் நல்லபடியாக வந்தால் கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அவளோடு சேர்ந்து வாழ்வேன். ஒருவேளை கண்ணம்மா தவறு செய்திருப்பது உறுதியானால் என்னுடைய மரணத்திற்கு அவள் தான் காரணம். இத்தனை நாளா என்னை ஏமாத்திட்டா என கையில் இருக்கும் மாத்திரையை பார்க்கிறான்.

இதனிடையில் ஹேமாவை பரிசோதனை செய்த டாக்டர் வெளி காயம் மட்டும் தான் இருக்கு. வேறு எந்த பிரச்சனையும் இல்லை என சொல்ல எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பிறகு அகிலன் பாரதி பற்றி கேட்க சௌந்தர்யா நானும் போன் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். சுவிட்ச் ஆப்னு வருது, டெல்லிக்கு ஏன் போனான்? எதுக்காக போனான்னு ஒன்னும் புரியல என சொல்ல அகிலன் டி என் ஏ ரிசல்ட் வாங்க டெல்லிக்கு போய் இருப்பான் என புரிந்து கொள்கிறான்.

Baakiyalakshmi Serial: படு கேவலமாக நடந்து கொண்ட கோபி: ராதிகாவிடம் சவால் விட்ட இனியா.!

ஆனால் பாரதியா வந்து சொல்ற வரை, எதுவும் நம்மால சொல்ல வேணாம் என முடிவெடுக்கிறான் அகிலன். இந்தப்பக்கம் பாரதி டாக்டரிடம் ரிசல்ட் வாங்க வர்ற, அவரும் நான் சென்னைல தான் படிச்சேன் என அவனிடம் நல்லா பேசுகிறார். அதன்பின்னர் அவனிடம் எதுக்காக இந்த டெஸ்ட் எடுக்குற என கேட்கும் போது, பாரதி நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறுகிறான். ரிசல்ட் எப்படி வந்துருக்கு. குழந்தைங்களோட என்னோட டிஎன்ஏ மேட்ச் ஆகுதா என கேட்கிறான்.

அவனிடம் எப்படி மேட்ச் ஆகாம போகும். இந்த குழந்தைங்க உங்களோட குழந்தை. ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க உங்களுக்கு பத்து வருஷம் ஆச்சா என கேட்கிறார். இந்த மூணு பிளட் சாம்பிளும் டிஎன்ஏ பக்காவா மேட்ச் ஆகுது. இவ்வளவு நாளா நீங்க உங்க மனைவியை தப்பா புரிஞ்சு வச்சிருக்கீங்க என டாக்டர் கூறுகிறார். இதனால் பாரதி கதறி அழுகிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Baakiyalakshmi Serial: கோபி இவ்வளவு மோசமானவரா.?: கதறி அழுத பாக்யா..!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி