ஆப்நகரம்

Bharathi Kannamma: மீண்டும் சேர்வதை பற்றி யோசித்த பாரதி: கண்ணம்மா போட்ட கண்டிஷன்.!

பாரதி கண்ணம்மா நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 27 Sep 2022, 10:03 am
பாரதி, கண்ணம்மாவிற்கு விருது வழங்கும் விழா தொடங்குகிறது. இருவருக்கும் விருது வழங்கிவிட்டு பாரதியை பேச அழைக்கின்றனர். அப்போது பேசும் அவன் ஒரு டாக்டரா நான் என்னோட வேலையை மட்டும் தான் செஞ்சேன். அமைச்சருக்கும் வெற்றிகரமா ஆப்ரேஷன் முடிக்க முக்கியமான காரணம் நான் மட்டும் இல்லை. எங்க ஹாஸ்பிட்டலோட அட்மின் ஆபிஷர் கண்ணம்மாவும் தான்.
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா


அதுமட்டுமில்லாமல் என்னோட உயிரை அவுங்களோட உயிரை பணயம் வைச்சு காப்பாத்துனாங்க. அதுக்காக நான் என்னைக்குமே அவுங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கேன் என சொல்லிவிட்டு சௌந்தர்யா அவளோட சேர்ந்து வாழ சொன்னதை பற்றி யோசிக்கிறான். அதன்பின் நன்றி சொல்லிவிட்டு கிளம்புகிறான். அவனை தொடர்ந்து கண்ணம்மாவும் அங்கு வந்து பேசுகிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவார்ட் பங்க்ஷன் முடிந்ததும் தீவிரவாதிகள் ஆப்ரேஷனை லீட் பண்ணி நடத்திய சசி பாரதியிடம் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும். நீங்க ஒருத்தர் உயிரை பணயம் வைச்சு இன்னொருத்தர் காப்பாத்துனத்தை பார்த்து உங்கள பற்றி வெளிய விசாரிச்சேன். அப்போதான் நீங்க ரெண்டு பேரும் கணவன், மனைவி. சின்ன மனஸ்தாபம் காரணமா பிரிஞ்சு இருக்கீங்கன்னு தெரிய வந்தது. ஒருத்தர் மேல ஒருத்தர் அளவுக்கடந்த அன்பு வைச்சு இருக்கீங்க.

ரெண்டு பேரும் ஏன் சேரக்கூடாது எனக்கேட்க, விக்ரமும் அகிலனும் கண்ணம்மாவுடன் சேருவதை பற்றி கேட்கின்றனர். அப்போது வெண்பா சொன்ன வார்த்தைகளை பற்றி யோசிக்கிறான் பாரதி. அதன்பின்னர் அவர்களிடம் என்னால கண்ணம்மாவை ஏத்துக்க முடியாது. அவுங்களுக்கு நான் நன்றிக்கடன் பாட்டு இருக்கேன். ஆனா அதுக்காக அவுங்கள என்னால ஏத்துக்க முடியாது என கூறிவிட்டு கிளம்பிவிடுகிறான்.

கல்யாணத்தை நிறுத்த போராடும் இராமமூர்த்தி: மண்டபத்திற்கு வந்த கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

அதன்பின்னர் சௌந்தர்யா கண்ணம்மா, லஷ்மியை வீட்டில் இறக்கிவிட்ட பின் பாரதி இப்படி செஞ்சது கஷ்டமா இருக்கு என்கிறாள். அதற்கு கண்ணம்மா, அவர் உயிரை காப்பாற்றியதற்காக என்னுடன் சேர்ந்து வாழ்றேன்னு சொல்லிருந்தா அதற்கு நான் சம்மதிச்சு இருக்க மாட்டேன். அவர் செய்த தவறை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டால் மட்டும்தான் அவரோடு சேர்ந்து வாழ்வேன் என கூற சௌந்தர்யா ஷாக்காகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி