ஆப்நகரம்

Vijay Tv: எனக்கும் பாண்டிக்கும் தொடர்பு இருக்குறது உண்மை தான்: அதிர்ச்சி கொடுத்த கண்ணம்மா!

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்டில் ஊர் மக்கள் முன்பாக பாண்டியை நிற்க வைத்து அவன் ஆம்பளயே இல்லை என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள் கண்ணம்மா.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 12 Jan 2023, 10:38 am
பாண்டியின் திட்டத்தின் படி ஊர் முழுவதும் கண்ணம்மாவை பற்றி வதந்தி பரவுகிறது. இதனால் அவள் மசாலா போடும் எந்த கடையிலும் பொருட்கள் வாங்காமல் திருப்பி அனுப்புகின்றனர். இதற்கான காரணம் புரியாமல் கண்ணம்மா வீட்டுக்கு வந்து புலம்புகிறாள். ரேஷன் கடையில் நடந்த சம்பவத்தையும், கண்ணம்மா சொல்வதையும் வைத்து என்ன பிரச்சனை என்பதை தாமரை புரிந்து கொள்கிறாள்.
Samayam Tamil Bharathi Kannamma
Bharathi Kannamma


ஆனால் அதுப்பற்றி எதுவும் சொல்லாமல் இருந்துவிடுகிறாள். கண்ணம்மாவின் அப்பா யாரிடமோ சண்டை போட்டு சட்டை கிழிந்து சேறும் சகதியுமாக வீட்டுக்கு வர கண்ணம்மாவும் தாமரையும் பதறிப்போய் என்னாச்சு என கேட்கின்றனர். அவர் கோபத்துடன் ஊர் ஜனங்க நாக்குல நரம்பில்லாமல் என்னென்னமோ பேசுறாங்க, அப்பா எது சொன்னாலும் உன்னுடைய நல்லதுக்கு தான் சொல்லுவேன்னு உனக்கு தெரியும் இப்ப சொல்றதயும் கேளுமா என்ன சொல்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கண்ணம்மா சொல்லுங்கப்பா என கேட்க நீ உன் புருஷனோட சேர்ந்து வாழு என்று கூற கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறாள். நம்ம இந்த ஊரை விட்டு போயிடலாம் என சொல்ல, என்னாச்சுப்பா என புரியாமல் கேட்கிறாள் கண்ணம்மா. பாண்டியின் வப்பாட்டி என ஊரில் பேசும் பேச்சையும், இதனாலே சண்டை போட்டு சட்டை கிழிந்து வந்த விஷயத்தை பற்றி அப்பா சொல்ல கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறாள்.

உடனே கண்ணம்மா, இன்னைக்கு அந்த பாண்டிக்கு இருக்கு என சொல்லி அங்கிருந்து கோபமாக கிளம்புகிறாள். தாமரை ஓடிச்சென்று பாரதியிடம் நடந்த விஷயங்களை கூறுகிறான். பாரதி கோபத்துடன் அங்கிருந்து வேகமாக கிளம்புகிறான். இதனிடையில் பாண்டியின் பிரெண்ட்ஸ் கண்ணம்மாவை வழி மறித்து, பிளான் பண்ணி அவளை அசிங்கப்படுத்திய விஷயங்களை புட்டு புட்டு வைக்கிறார்கள். பாரதியும் மறைந்திருந்து அவர்கள் பேசுவதை கேட்கிறான்.

Baakiyalakshmi Serial: வெக்கமா இல்லையா உனக்கு.?: பாக்யாவை கண்டமேனிக்கு விளாசிய ஈஸ்வரி.!

கண்ணம்மா அவர்களிடம் இன்னைக்கு உங்க அண்ணன் எப்படி அசிங்கப்பட போறாரு பாரு என சவால்விட்டு குஸ்தி நடக்கும் இடத்திற்கு செல்கிறாள். இந்தப்பக்கம் பாண்டி போட்டியில் ஜெயித்து இந்த ஊர்ல என்னை ஜெயிக்க யாரும் இல்லையா என வீர வசனம் பேசி கொண்டிருக்கிறான். அப்போது அங்கு என்ட்ரி கொடுக்கும் கண்ணம்மா கைத்தட்டி கொண்டே வருகிறாள். அவள் வந்ததும் ஊர்க்காரகள் அனைவரும் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர்.

கண்ணம்மா, பாண்டி என்ன வச்சிட்டு இருக்குறது உண்மைதான். ஆனா அதைவிட முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும், பாண்டி என்னமோ என் மேல ஆசைப்பட்டு தான் வந்தாரு ஆனா அவர் உண்மையான ஆம்பள கிடையாது. ஆம்பளைன்னா வெறும் நாலு பேர தூக்கி போட்டு அடிக்கிறது கிடையாது, அது வேற விஷயம். அது பாண்டிக்கு கிடையாது என சொல்ல பாண்டி உட்பட அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். பாரதி பாண்டி மாட்டி கொண்டதை பார்த்து சிரிக்கிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Baakiyalakshmi Serial: ராதிகாவை ஓட விட்ட செல்வி: பாக்யாவின் புதிய அவதாரம்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி