ஆப்நகரம்

Bharathi Kannamma: ஹேமாவை கொலை செய்ய முடிவெடுத்த வெண்பா: அதிரடி திருப்பம்.!

பாரதி கண்ணம்மா நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 25 Nov 2022, 10:22 am
ஹேமாவை கடத்திவிட்டு கட்டிப்போடும் ரவுடிகள் வெண்பாவிடம் இதனை சொல்ல அவள் சந்தோஷப்படுகிறாள். குழந்தையை என்ன செய்யலாம் என கேட்க, அந்த கண்ணம்மா என்னை ஜெயிச்சுட்டேன்னு நினைச்சுட்டு இருக்கா. அவளுக்கும் பாரதிக்கும் நான் யாருன்னு காண்பிக்கனும். ஹேமாவை கொன்று என சொல்கிறாள்.
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா


அவள் போனை வைத்ததும் மற்றொரு ரவுடி அவனிடம் இந்த குழந்தையை கொல்றதுக்கு பதிலா கைமாத்தி விடலாம். இப்போ இந்த மாதிரி குழந்தைங்களுக்கு மார்கெட்ல நல்ல வேல்யூ. நமக்கு கொல்றதை விட ஐந்து மடங்கு அதிகமா இதுனால பணம் கிடைக்கும் என சொல்கிறான். இது நல்ல ஐடியாவா இருக்கே என யோசிக்கும் ரவுடி உடனே வெண்பாவுக்கு போன் பண்ணி இதனை கூறுகிறான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த மாதிரி பண்ணா எங்களுக்கும் கொஞ்சம் பணம் கிடைக்கும் என அவன் கூற, வெண்பாவும் யோசித்துவிட்டு ஓகே சொல்கிறாள். உடனே குழந்தையை கைமாற்றிவிடுமாறு கூறுகிறாள். இதனிடையில் பாரதி சரக்கு அடித்து விட்டு, எனக்கு என்னமோ கண்ணம்மா தப்பு பண்ணிருக்க மாட்டன்னு தோணுது. ஆனாலும் ரிசல்ட் வரட்டும். உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு உன்கூட சேர்ந்து வாழுறேன்.

ஆனா ஒருவேளை இத்தனை வருஷம் நான் நம்பினது ரிசல்ட்டா வந்தால், இந்த ரூம்லயோ இல்லை இந்த ஊர் ரோட்லயோ என் வாழ்க்கையை முடிச்சுப்பேன் என பேசி கொள்கிறான். இந்தப்பக்கம் ஹேமாவை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அகில், தனக்கு தெரிஞ்ச போலீசிடம் சொல்லி இருப்பதாகவும், அவர் விசாரணையை தொடங்கிவிட்டதாகவும் கூறுகிறான். பாரதிக்கு போன் பண்ணி பார்த்தால் போகவே இல்லை எனவும் கூறுகிறான்.

Baakiyalakshmi Serial: இனியாவால் கோபி, ராதிகா இடையே வெடித்த மோதல்: தாத்தா நினைச்சது நடக்குது.!

உடனே கண்ணம்மா உங்க பையன் ஹேமாவை கூட்டிட்டு போயிருப்பாரா என சௌந்தர்யாவிடம் கேட்கிறாள். அதற்கு அவள் பாரதி நேத்தே டெல்லி கிளம்பி போய்விட்டதாகவும், ஹேமா இப்போ வரை ஆசிரமம் போனதும் நமக்கு தெரியும் எனவும் கூறுகிறாள். அதன்பின்னர் மீண்டும் ஹேமாவை தேட ஆரம்பிக்கின்றனர். இந்தப்பக்கம் வெண்பா குழந்தையை கொன்னு இருந்தாக்கூட, நாலு நாள் அழுதுட்டு, அப்பறம் அவுங்கவுங்க வேலையை பார்க்க ஆரம்பிச்சு இருப்பாங்க.

ஆனால் இப்போ காலம் பூரா ஹேமாவை தேடிட்டே இருப்பாங்க. பழைய வெண்பாவா மாறி என் ஆட்டத்தை ஆரம்பிக்கிறேன் என கண்ணாடியை பார்த்து சிரித்து கொண்டே சொல்கிறாள். அப்போது அங்கு வரும் ரோஹித், என்ன தலைல அடிப்பட்டிருக்க. தனியா பேசி சிரிச்சுட்டு இருக்க என கேட்கிறான். அதற்கு வெண்பா பதில் எதுவும் சொல்ல முடியாது என கூறிவிடுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Baakiyalakshmi Serial: ராதிகா, இனியா இடையே வெடித்த சண்டை: சிக்கித்தவிக்கும் கோபி.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி