ஆப்நகரம்

Bharathi Kannamma: லஷ்மியை மகளாக ஏற்றுக்கொண்ட பாரதி: கோபத்தில் கொந்தளித்த வெண்பா.!

பாரதி கண்ணம்மா நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 29 Sep 2022, 9:44 am
வெண்பா தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பாவாக இருக்க சொன்னதால் கடும் கோபத்தில் இருக்கும் பாரதி வீட்டுக்கு வருகிறான். அவனிடம் வந்து பேசும் ஹேமா ஸ்கூலில் நடந்த விஷயங்களை கூறுகிறாள். அதற்கு அவன் உன்மேல எந்த தப்பும் இல்லை. ஆனா எந்த பிரச்சனையா இருந்தாலும் மொத மிஸ்கிட்ட சொல்லணும்என்கிறான். அவர்கள் பேசி கொண்டிருக்கும் போது அங்கு வருகிறாள் சௌந்தர்யா.
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா


ஹேமாவை அனுப்பி வைத்துவிட்டு நான் நெறைய கனவோட இருந்தேன்டா. இவ்வளவு நடந்தும் நீ ஏன் கண்ணம்மாவை ஏத்துக்க மாட்ற என கேட்கிறாள். அதற்கு பாரதி, நான் இங்க உயிரோட நிற்குறதுக்கு காரணமே கண்ணம்மா தான். ஆனா அவ எனக்கு பண்ண துரோகத்தை என்னால மறக்க முடியல. தயவு செஞ்சு இந்த விஷயத்தை இதோட விடுங்க என்கிறான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனிடையில் வெண்பா நான் பாரதிக்காக எவ்வளவோ விஷயம் பண்ணி இருக்கேன். ஆனா ஒரு பேச்சுக்கு கூட அவ நான் கேட்ட உதவியை பண்ணல என்கிறாள். அதற்கு சாந்தி, நல்லது மட்டுமா பண்ண. பாரதி இப்ப பட்ற எல்லா கஷ்டத்துக்கும் காரணமே நீதான் என மனதிற்குள்ளே நினைத்து சிரிக்கிறாள். அப்போது ரோஹித் போன் பண்ணி நம்ம கல்யாணத்துக்காக ஆண்ட்டி தேதி குறிக்கிறாங்க என சொல்ல ஷாக்காகிரால் வெண்பா.

இதனிடையில் கண்ணம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் லஷ்மி மட்டும் ஸ்கூலுக்கு வருகிறாள். ஹேமாவிற்காக பாரதி வந்து டீச்சரிடம் பேசுகிறான். லஷ்மிக்கு அவள் அம்மா வராததால் பாரதியை பேச சொல்கிறாள் ஹேமா. அதற்கு அவன் அவுங்க பேரண்ட்ஸ் வந்து பேசுவாங்க என சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறான்.

கட்டிய புருஷனை அந்த கோலத்தில் பார்த்த பாக்யா: அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.!

அப்போது கண்ணம்மா தன்னை காப்பாற்றியதை நினைத்து மீண்டும் உள்ளே வரும் பாரதி லஷ்மிக்காக நான் லெட்டர் எழுதி தரேன். நான்தான் அவளை படிக்க வைக்கிறேன். நான் லெட்டர் எழுதி தர்றேன் என்கிறான். அந்த சமயத்தில் அங்கு வரும் சௌந்தர்யா இதனை பார்த்து சந்தோஷப்படுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி