ஆப்நகரம்

Bharathi Kannamma: ரோஹித்தின் முகத்திரையை கிழித்த சாந்தி.. செம்ம ஷாக்கில் வெண்பா.!

பாரதி கண்ணம்மா நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 29 Jun 2022, 10:16 am
ரோஹித் பேசியதால் குழப்பத்தில் இருக்கும் சாந்தியிடம் என்னடி ஆச்சு? எதையோ யோசிச்சுட்டு இருக்க என விசாரிக்கிறாள் வெண்பா. எனக்கு அந்த ரோஹித் மேலே சந்தேகமா இருக்கும்மா. அன்னைக்கு நான் அவர் ரூம் வெளிய நிற்கும் போது, யார்க்கிட்டயோ போன்ல ஐம்பது ரூபாய் கடனா கேட்டு கெஞ்சிட்டு இருந்தாரு. இப்போ அவர் குளிச்சுட்டு இருந்ததால, அவருக்கு வந்த போனை நான் எடுத்து பேசுனேன்.
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா


அதுல யாரோ ஒருத்தன் பணம் ரெடி பண்ணிட்டியா? கிடைச்ச அளவுக்கு சீக்கிரம் சுருட்டிட்டு வான்னு சொல்றான் என சொல்ல, எனக்கும் அவன் மேல ஆரம்பத்துல இருந்தே சந்தேகமா இருந்துச்சு. நீ அவனை விடாம வாட்ச் பண்ணிட்டே இரு. அந்த ரோஹித் அம்மாவை வேணா ஏமாத்தி இருக்கலாம். ஆனா என்னை ஏமாத்த முடியாது என வெண்பா சொல்கிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனிடையில் விக்ரம் கிளாஸ் டீச்சரை டெஸ்ட் பண்ணுவதற்காக லேப்புக்கு அழைத்து செல்கிறான் பாரதி. அவள் கணவன் வெளியில் நின்று கண் கலங்கி அழுக, அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள் கண்ணம்மா. அவளிடம் கணவன், மனைவி பந்தம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசுகிறான். இந்தப்பக்கம் ஸ்கூலில் சோகமாக இருக்கும் ஹேமாவிடம் என்னாச்சு என விசாரிக்கிறாள் லஷ்மி.

நான் அடம் பிடிச்சதால டாடி டிவோர்ஸ் வேணாம்ன்னு சொல்லிட்டாரு. ஆனா அவர் டைவர்ஸ் பண்ண போறது உண்மை தான. எப்படியாவது என் அம்மா யாருன்னு நான் கண்டுபிடிக்கனும் என சொல்கிறாள். லஷ்மியும் என் அப்பா யாருன்னு கண்டு பிடிச்ச மாதிரி, உன் அம்மா யாருன்னு கண்டுபிடிக்கணும் என மனதிற்குள்ளே யோசிக்கிறான். இதனிடையில் பணத்தை எப்படி ரெடி பண்ணுவது என யோசிக்கும் ரோஹித், ஷர்மிளாவிடம் பணம் கேட்கலாம் என யோசித்து அவளுக்கு போன் பண்ணுகிறான்.

Baakiyalakshmi Serial: வெளிவந்த கோபியின் முழு சுயரூபம்.. கதறி அழும் எழில்.!

அவளிடம் என்னோட பேங்க் அக்கெளன்ட் எல்லாமே லாக் ஆகிருச்சு. இந்த நேரத்துல என்கிட்ட வேலை பார்க்குற ஒருத்தவங்களுக்கு கல்யாணம். அதுக்கு கிப்ட் கொடுக்கணும் என சொல்ல, நீங்க பேங்க் விவரம் அனுப்புங்க. நான் பணம் அனுப்புறேன் என சொல்கிறாள். இதையெல்லாம் சாந்தி வெளியில் நின்று ஒட்டு கேட்டு, வெண்பாவிடம் வந்து சொல்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி