ஆப்நகரம்

Bharathi Kannamma: வெண்பாவுக்கு மாலை போட்ட பாரதி: கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.!

பாரதி கண்ணம்மா நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 18 Aug 2022, 10:06 am
வெண்பாவின் என்கேஜ்மென்ட் பங்க்ஷனுக்காக சௌந்தர்யா குடும்பத்துடன் வருகிறாள். அவளிடம் ஷர்மிளா, இந்த பங்க்ஷனை உங்க வீட்டு பங்க்ஷன் மாதிரி நடத்துறது ரொம்ப சந்தோஷம். தாங்க்ஸ் என கூறுகிறாள். அப்போது ஹாஸ்பிட்டலில் இருந்து கண்ணம்மாவும் அங்கு வந்து விடுகிறாள். நீங்க எல்லாரும் தான் முன்னாடி இருந்து இந்த பங்க்ஷனை நடத்தனும் என கூறுகிறாள் ஷர்மிளா.
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா


இதனிடையில் பாரதியும் அங்கு வர லஷ்மியும், ஹேமாவும் ஒன்றாக பேசி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறான். ஹேமாவை கூப்பிட்டு என்ன பேசிட்டு இருக்கீங்க என கேட்கிறாள். ஸ்கூல் போகதப்பா நடந்த விஷயத்தை பற்றி பேசுவதாக கூறவும் நிம்மதியடைகிறான். அதனை தொடர்ந்து அனைவரும் ஸ்டேஜ் அருகில் செல்கின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த பக்கம் வெண்பா பங்க்ஷனுக்கு ரெடியாகி கடுப்புடன் இருக்க அங்கு வரும் ஷர்மிளா, சொன்னது எல்லாம் நியாபகம் இருக்குல. எல்லாரும் பங்க்ஷன் வந்து இருக்காங்க. ஒழுங்கா நடந்துக்க என கூறிவிட்டு செல்கிறாள். அதனை தொடர்ந்து பங்க்ஷன் ஸ்டார்ட் ஆக, வெண்பா தன்னருகில் பாரதி இருப்பதை போல் நினைத்து பார்க்கிறாள்.

பாரதியும் தானும் மாறிமாறி மாலை மாற்றி கொள்வதாக நினைத்து கொண்டே ரோஹித் கைகளை பிடிக்கிறாள். இதனால் அனைவரும் ஆச்சரியமடைகின்றனர். அதன்பின்னர் சுயநினைவுக்கு வரும் வெண்பா அவன் கைகளை தட்டிவிடுகிறாள். இதனையடுத்து நிச்சயம் ஸ்டார்ட் ஆக வெண்பா நிறுத்த சொல்கிறாள். எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை என கூறுகிறாள்.

Baakiyalakshmi Serial: சொடக்கு போட்டு சவால் விட்ட பாக்யா: நடுரோட்டுக்கு வந்த கோபி.!

சௌந்தர்யா, வேணு அவளை சமாதானப்படுத்த, இந்த மாப்பிள்ளையை நீ ஏன் வேணாம் சொல்ற. நல்ல படிச்சு இருக்காரு. சமூகத்துல பெரிய அந்தஸ்துல இருக்காரு. அப்பறம் ஏன் வேணாம் சொல்ற என கேட்க, இந்த மாதிரி யாரும் இல்லாத அனாதையாக இருக்கும் ரோஹித்தை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது என சொல்கிறாள். இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி