ஆப்நகரம்

Bharathi Kannamma: வெண்பாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை: விபரீத முடிவெடுத்த பாரதி.!

பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட்டில் வெண்பாவுக்கு மனநல சிகிச்சை எடுக்க நீதிபதி உத்தரவிடுகிறார்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 22 Dec 2022, 10:32 am
பாரதி தனக்கு லெட்டர் கொடுத்தது யாரென்றும் லொகேஷன் அனுப்பியதும் ஹேமா தான் என நினைக்கிறான். அவளுக்கு தன்மேல் இருக்கும் பாசத்தினாலே இவ்வாறு செய்வதாக யோசிக்கிறான். அவளை ஸ்கூளில் சந்தித்து இதுக்குறித்து கேட்கிறான். ஆனால் ஹேமா அப்படியெல்லாம் செய்யவில்லை என்றும் தன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்றும் கூறுவதால் ஷாக்காகிறான்.
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா


அப்போ நமக்கு குழு கொடுத்தது யார் என அவன் யோசித்துக் கொண்டிருக்கும் டாக்டர் அப்பா என லட்சுமி குரல் கொடுத்து கிளாஸ் ரூமில் இருந்து வெளியே வருகிறாள். உங்களுக்கு லொகேஷன் அனுப்புனது, ஐ லவ் யூ அப்பானு பேப்பர்ல எழுதி தூக்கி போட்டது. சாப்பாடு வச்சது எல்லாமே நான் தான். ஆனா உங்களுக்கு என் ஞாபகம் வரவே இல்லையே ஏன்? இத லட்சுமி பண்ணியிருக்க மாட்டாளான்னு நீங்க யோசிக்கக்கூட இல்ல.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

என் மேல உங்களுக்கு பாசமே இல்லையா என கேட்கிறாள். ஹேமா உங்க கூடவே இருந்ததுனால அவ உங்களை மிஸ் பண்ணல, அவளுக்கு அவ தேடின அம்மா கிடைச்சுட்டாங்க ஆனா எனக்கு நான் தேடுன அப்பா இன்னும் கிடைக்கல. நான்தான் அம்மாகிட்ட இந்த ஊரை விட்டு போயிடலாம்னு சொன்னேன் ஆனா சென்னையில் இருந்து கிளம்பி வந்ததும் தான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் என சொல்லி அழுகிறாள். உடனே பாரதி நான் செஞ்சது தப்பு தான் என அழுகிறான்.

அவனிடம் அப்பாவென கூப்பிட பர்மிஷன் கேட்கிறாள் லஷ்மி. உன் வாயில இருந்து அப்படி ஒரு வார்த்தையை கேட்கத்தான் வெயிட் பண்றேன் என சொல்ல, லஷ்மி அப்பா என கூப்பிட்டு லவ் யூ சொல்கிறாள். இதனிடையில் வெண்பாவை கோர்ட்டில் நிறுத்தி எப்ப பார்த்தாலும் கண்ணம்மா கண்ணம்மா என சொல்லி எல்லோரையும் அடிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். அப்போது நீதிபதியாக இருப்பவரும் வெண்பா கண்ணுக்கு கண்ணம்மா போல தெரிய அவரையும் அடிக்கப் பாய்கிறாள்.

Baakiyalakshmi Serial: ஈஸ்வரி செய்த காரியத்தால் கதறி அழுத எழில்: பாக்யாவின் அதிரடி முடிவு.!

இதுதான் அவருடைய நிலைமை, மன அழுத்தத்தில் இருக்கிறார். இதை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வெண்பா தரப்பு நீதிபதி வாதாட அரசு தரப்பு மருத்துவர் டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட்டை நீதிமன்றத்தில் சப்மிட் செய்ய சொல்லி உத்தரவிடுகிறார். இதனிடையில் பாரதி இந்த ஊர் மக்களின் மனசை மாற்ற என்ன வழி என யோசிக்கிறான்.

ஊர் மக்கள் மனச மாத்த அவர்கள் பல வருஷங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவமனையை அரசாங்கத்தினை கட்ட வைக்க வேண்டும். அதற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவெடுத்து உண்ணாவிரதத்தில் உட்காருகிறான். ஊர்மக்கள் அவனே ஊரை விட்டு கிளம்பிவிடுவான் என கலைந்து செல்கின்றனர். லஷ்மியும், ஹேமாவும் அவனை நினைத்து வருத்தப்படுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Baakiyalakshmi Serial: பாக்யா செய்த காரியம்: கோபத்தில் கொந்தளித்த கோபி.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி