ஆப்நகரம்

வெட்ட வெளிச்சத்துக்கு வந்த வெண்பாவின் கோர முகம்: கதறி அழும் பாரதி.. கண்ணம்மாவின் முடிவு என்ன.?

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்டில் வெண்பா பாரதிக்கு எதிராக செய்த ஒட்டுமொத்த சூழ்ச்சிகளையும் போட்டுடைக்கிறாள்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 8 Dec 2022, 10:40 am
வெண்பாவிடம் எதுக்காக இந்த மாதிரியெல்லாம் பண்ண? உன்ன ஒரு நல்ல பிரெண்ட்டா தான பார்த்தேன். என் வாழ்க்கையை ஏன்டி இந்தளவுக்கு நாசம் பண்ண. நான் உனக்கு என்னடி பண்ணேன் என கேட்கிறான் பாரதி. அவன் கேள்விகளை கேட்டு வில்லத்தனமாக சிரிக்கும் வெண்பா, இதுக்கு ஷாக்கான எப்படி. நான் எதுக்காக பண்ணேன்னு உனக்கு தெரியாது என கேட்கிறாள்.
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா


அவனை பார்த்து ஏன்னா நான் உன்னை லவ் பண்றேன். அதெப்படி உனக்கு கடலை போட, ஊர் சுத்த நான் வேணும். லவ், கல்யாணம் பண்ண இன்னொருத்தி வேணுமா? ஹேமா நியாபகம் இருக்கா? அதான் உன்னோட எக்ஸ் லவ்வர். அவ ஆக்சிடென்ட்ல செத்தான்னு நினைச்சியா? அவளை ஆள் வைச்சு லாரி அடிச்சு தூக்க விட்டதே நான்தான்டா.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவ செத்து நீ யாரையும் லவ் பண்ணக்கூடாதுன்னு தான் உனக்கு குழந்தை பெத்துக்குற தகுதியே போச்சுன்னு புரூடா விட்டேன். ஆனா நீ போயும் போயும் இந்த கண்ணம்மாவை லவ் பண்றேன்னு பத்திரிகை அனுப்புற என சொல்கிறாள். இத்னைக்கேட்டு பாரதி உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். அதுக்கப்புறம் குழந்தைங்க உனக்கு பிறக்கலன்னு சொல்லி கொஞ்சம் கொஞ்சமா உன் மனசுல நஞ்சை விதைச்சேன்.

அதுக்கப்புறம் உன்னை ரெண்டு தடவை கல்யாணம் பண்ற வரை வந்து இந்த கண்ணம்மா தடுத்துட்டாள். இவளையும் கொள்ள பலதடவை ஸ்கெட்ச் போட்டேன். ஆனா த்ப்புச்சுட்டே இருந்தா, இவளுக்கு ஆயுசு கெட்டி போல. இதோ நிற்கிறான்ல துர்கா. இவனை வைச்சு தான் பிளான் போட்டேன். இதெல்லாம் உன்ன லவ் பண்ணதால தான் என சொல்லி, இப்ப இவளை கொல்றேன் என கண்ணம்மா அருகில் வருகிறாள்.

Baakiyalakshmi Serial: தாத்தாவுக்கு தெரிய வந்த அதிர்ச்சிகரமான உண்மை: எழில் விஷயத்தில் அதிரடி முடிவு.!

உடனே ஷர்மிளா அவளை தடுத்து அடிக்கிறாள். அந்த சமயத்தில் போலீசும் அங்கு வருகின்றனர். யார் போன் பண்ணி வர சொன்னது என கேட்க, ஷர்மிளா நான்தான் வர சொன்னேன். இதோ நிற்குறால வெண்பா. இவதான் பல கொலை செஞ்சுட்டு சுத்திட்டு இருக்கா. நான் பெத்த பொண்ணு தான் இவ. கொஞ்சம் செல்லம் கொடுத்து வளர்த்துட்டேன். அதான் சைக்கோ மாதிரி சுத்திட்டு இருக்கா. மொத இவளை கூட்டிட்டு போங்க. பின்னாடியே புகார் கொடுக்க நான் வர்றேன் என ஷர்மிளா சொல்கிறாள்.

வெண்பா போறதுக்கு முன்பாக இதோடு முடிஞ்சுருச்சு நினைக்காத. இது ஒரு சின்ன பிரேக் தான். லவ் யூ என பாரதியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறாள். அதன்பின்னர் ஷர்மிளாவும், ரோஹித்தும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு செல்கின்றனர். நடந்த விஷயங்களால் பாரதி கதறி அழுக, அனைவரும் அவனுக்கு ஆறுதல் சொல்கின்றனர். கண்ணம்மாவிடம் சென்று கை கூப்பி மன்னிப்பு கேட்கிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Baakiyalakshmi Serial: கோபியை கீழே தள்ளிவிட்ட ராதிகா: அதிர்ச்சியில் உறைந்த இனியா.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி