ஆப்நகரம்

Bharathi Kannamma: விடிந்தால் நிச்சயதார்த்தம்: நடு இரவில் காணமல் போன பாரதி.!

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்டில் காணமல் போன பாரதியை தேடி செல்கின்றனர் அகிலனும், கணபதியும்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 1 Feb 2023, 10:44 am
கண்ணம்மாவை பெண் பார்க்க வருகிறான் பாரதி. அவள் அப்பாவை தனியாக அழைத்து கல்யாணம் ஆனதும் குழந்தை பெத்துக்கணும் என பர்மிஷன் கேட்கிறார். அதற்கு அவர் கண்ணம்மாவிடமே கேட்குமாறு சொல்கிறார். கண்ணம்மா வெட்கப்பட்டு கொண்டே ஒகே சொல்கிறார். அதன்பின்னர் கல்யாண வேலை தடபுடலாக நடக்கிறது.
Samayam Tamil Bharathi Kannamma
Bharathi Kannamma


நாளை நிச்சயார்த்தம் என்பதால் அனைவரும் டிரெஸ் எடுக்க கிளம்புகின்றனர். கடைசி நேரத்தில் பாரதி தான் வரவில்லை என்றும் நீங்கள் எல்லாரும் போய்ட்டு வாருங்கள் என கூறுகிறான். அவன் வரவில்லை என சொன்னதும் நாளைக்கு நிச்சயம். ,முகூர்த்த டிரெஸ் எல்லாம் எடுக்கணும். நிச்சயம் அப்போ முகூர்த்த டிரெஸ்ஸை வைக்கணும் என சௌந்தர்யா கூறுகிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பாரதி அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க போயிட்டு வாங்க என சொல்கிறான். கண்ணம்மாவும் அவர் ஏதோ பிளான் வைச்சு இருக்காரு. நம்ம போயிட்டு வரலாம் என சொல்லி கிளம்புகின்றனர். கணபதி எனக்கு மட்டும் என்ன பிளான்னு சொல்லுங்க என கேட்க, நாளைக்கு காலைல தெரியும் பாருங்க என கூறுகிறான். இதனிடையில் டிரெஸ் எடுக்க சென்ற அனைவரும் வேலையை முடித்துவிட்டு வந்துவிடுகின்றனர்.

இரவிலும் பாரதி எந்த கவலையும் இல்லாமல் இருக்க, நாளைக்கு நிச்சயதார்த்தம். இவன் இன்னமும் முகூர்த்த புடவை எடுக்காமல் இருக்கான் என சௌந்தர்யா புலம்புகிறாள். அவர் ஏற்கனவே எடுத்து வச்சிட்டு இருப்பார் அதான் இப்படி கூலாக இருக்கிறார் என கண்ணம்மா சொல்கிறாள். அதன்பின்னர் அகிலன் மற்றும் கணபதி மட்டும் பாரதி உடன் சமுதாயக்கூடத்தில் தூங்க வருகின்றனர்.

Baakiyalakshmi Serial: அமிர்தாவுக்கு பச்சை துரோகம் செய்யும் எழில்: அதிர்ச்சியில் கோபி, ராதிகா.!

அனைவரும் தூங்கிய பிறகு நடு இரவில் பாரதி யாருக்கும் சொல்லாமல் கிளம்பி போகிறான். அவனை பார்த்து அகிலனையும் அழைத்து கொண்டு பாலோ செய்கிறான் கணபதி. அவர்கள் பின்னாடியே போக, ஒரு இடத்தில் பாரதியை மிஸ் செய்துவிடுகின்றனர். அவன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் அகிலனும், கணேசனும் உறங்க செல்கின்றனர்.

Baakiyalakshmi Serial: பாக்யா தலையில் இடியை இறக்கிய எழில்: பரபர திருப்பம்.!

மறுநாள் காலையில் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடக்க சௌந்தர்யா உட்பட எல்லோரும் பாரதி ரெடி ஆகிட்டானா என கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவன் இன்னமும் வராததால் கணபதி ஏதேதோ சொல்லி சமாளிக்கிறான். அதன்பின்னர் அகிலனும், கணபதியும் பாரதியை பாலோ பண்ணி மிஸ் பண்ண இடத்தில் மறுபடியும் தேட முடிவு செய்து கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி