ஆப்நகரம்

Vijay Tv: கண்ணம்மாவை பார்த்து பாரதி கேட்ட ஒத்த கேள்வி: ஆடிப்போன மொத்த குடும்பம்.!

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்டில் மயக்கத்தில் இருந்து கண் விழிக்கும் பாரதி கண்ணம்மா பெயரை சொல்லி புலம்புகிறான்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 19 Jan 2023, 11:11 am
பாரதி மயக்கத்தில் இருந்து விழிக்க சௌந்தர்யா, அகிலன், அஞ்சலி மூவரும் அவன் முன்னாடி போய் நிற்கின்றனர். அவர்களை பார்த்ததும் இதெல்லாம் யார் என கேட்கிறான். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சியாக, டாக்டர் அவர்களை வெளியில் அனுப்பிவிட்டு டெஸ்ட் பண்ணுகிறார். அனைவரும் பதட்டத்தில் காத்திருக்க டாக்டர் வருகிறார்.
Samayam Tamil Bharathi Kannamma
Bharathi Kannamma


சௌந்தர்யா பாரதிக்கு என்னாச்சு என பயத்துடன் கேட்கிறாள். பாரதிக்கு பழைய நினைவுகள் ஞாபகத்தில் இல்லை அவர் எல்லாவற்றையும் மறந்து விட்டார் என டாக்டர் சொல்கிறார். அவருக்கு மீண்டும் பழைய நினைவுகள் வர நீங்க தான் உதவி செய்யனும். அவர்க்கிட்ட பேசி பழைய நினைவு எல்லாத்தையும் மீட்டு கொண்டு வரணும் என சொல்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்பக்கம் கண்ணம்மா பாரதி மயக்கத்தில் இருந்து முழித்து இருப்பானா என யோசிக்கிறான். உடனே சௌந்தர்யாவுக்கு போன் போட்டு பாரதி குறித்து விசாரிக்க அவன் பழசு எல்லாத்தையும் மறந்துட்டான். அவன் கண் முழிச்சு என்ன பயன். பெத்த அம்மா என்னையே யாருன்னு கேட்குறா? என்னால பேசவே முடியல என கதறி அழுது போனை வைக்கிறாள்.

அதன்பின்னர் பாரதி தூக்கத்தில் கண்ணம்மா கண்ணம்மா என புலம்ப அதை கேட்டு நர்ஸ் ஓடி வந்து டாக்டரிடம் விஷயத்தை சொல்கிறார். அடுத்த எல்லோரும் உள்ளே சென்று பார்க்க பாரதி கண்ணம்மா கண்ணம்மா என புலம்புவது தெரிய வருகிறது. கணேஷன் அதனை வீடியோ எடுக்கிறான். கண்ணம்மா யார் என டாக்டர் கேட்க, அவரோட மனைவி தான். இப்போ ஒரு சின்ன பிரச்சனையால பிரிஞ்சு இருக்காங்க என கூறுகிறாள் அஞ்சலி.

Baakiyalakshmi Serial: கோபியின் முகத்திரையை கிழித்த இராமமூர்த்தி: ஆடிப்போன இனியா.!

டாக்டர் உடனடியாக அந்த கண்ணம்மாவை இங்கே கூட்டிட்டு வாங்க. அவங்களால தான் பாரதியோட நினைவுகளை பழையபடி மீட்டெடுக்க முடியும் என சொல்கிறார். பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவை வீட்டுக்கு சென்று நடந்ததை கூறி அழைக்கிறாள். குழந்தைகளும் நீங்க போங்கமா, அப்பாவுக்கும் உன்னை பார்த்ததும் எல்லாமே ஞாபகம் வந்துடும் என சொல்கின்றனர். கணேசனும் போனில் உள்ள வீடியோவை காண்பிக்கிறான்.

Baakiyalakshmi Serial: பாக்யாவுக்கு எதிராக கோபி செய்த மட்டான காரியம்: சவால் விட்ட எழில்.!

சௌந்தர்யா கதறி அழுது உன்கிட்ட மடிப்பிச்சை கேக்குறேன் என பேச கண்ணம்மா வாங்க போகலாம் என ஹாஸ்பிடல் கிளம்பி வருகிறாள். அவளை பார்த்ததும் பாரதி சிரிக்க அவனுக்கு நியாபகம் வந்துவிட்டதாக அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக இது யாரு என பாரதி கேட்க கண்ணம்மா உட்பட குடும்பத்தினர் அனைவரும் ஆடிப்போகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி