ஆப்நகரம்

Vijay Tv: பாண்டியின் முகத்திரையை கிழித்த கண்ணம்மா: பாரதி எடுத்த திடீர் முடிவு.!

பாரதி கண்ணம்மாவில் தன்மீது அபாண்டமாக பழி சுமத்திய பாண்டியின் வாயாலே நடந்த உண்மைகளை கூற வைக்கிறாள் கண்ணம்மா.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 14 Jan 2023, 11:25 am
பாண்டி தன் மீது அபாண்டமாக பழி சுமத்தியதால் உண்மையை நிரூபிக்க ஊர் மக்கள் கூடிய குஸ்தி சண்டை நடக்கும் இடத்திற்கு செல்கிறாள் கண்ணம்மா. அப்போது பாண்டியன் நண்பரகள் சிலர் அவளை வழி மறித்து நடந்த விஷயங்களை கூறி, எங்க அண்ணன் உன்னை தொடாமலே அசிங்கப்படுத்திட்டாரு. பார்த்தியா என வீர வசனம் பேசுகின்றனர். உடனே கண்ணம்மா உங்க அண்ணன் வாயாலையே நடந்த எல்லாத்தையும் சொல்ல வைக்குறேன் பாருங்க என சொல்லி மைதானத்திற்கு செல்கிறாள்.
Samayam Tamil Bharathi Kannamma
Bharathi Kannamma


அங்கு போட்டியில் ஜெயித்து வீர் வசனம் பேசும் பாண்டி முன்பாக நின்று பாண்டிக்கு நான் வப்பாட்டியா இருக்குறது உண்மைதான். ஆனா பாண்டி ஆம்பளையே கிடையாது. இதெல்லாம் மறைக்குறதுக்கு தான் ஊருக்குள்ள வீராப்பா திரிஞ்சுட்டு இருந்துருக்கன் என கூறுகிறாள். இத்னைகேட்டு அதிர்ச்சி அடையும் ஊர் மக்கள் பாண்டியை பார்த்து புஸ்வானம் பாண்டியன் என சொல்லி சிரிக்கின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கண்ணம்மா கூட்டத்தில் நிற்கும் ஒரு பெண்ணிடம் இன்னும் விஷயம் இருக்கு என சொல்லி அவள் காதில் போய், எனக்கும் பாண்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீங்க எல்லாரும் அவனை கிண்டல் பண்ணுங்க. அவன் வாயலையே உண்மையை சொல்லுவான் என்கிறாள். அவளும் தன் பக்கத்தில் இருக்கும் பெண்களிடம் இதனை சொல்ல, அனைவரும் சேர்ந்து பாண்டியை கிண்டல் செய்கின்றனர். இதனால் கோபமடையும் அவன் அப்படி சொல்லாதீங்க என சத்தம் போடுகிறான்.

நான் நடந்த எல்லா உண்மையையும் சொல்றேன் எனக்கூறி, கண்ணம்மாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என் மூச்சு காத்து கூட அவ மேல பட்டது கிடையாது என நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறான். இதனை கேட்டு ஊர் மக்கள் அனைவரும் அவனை கன்னாபின்னாவென்று திட்டி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கின்றனர். அனைவரும் அவனை திட்டி காரி துப்புகின்றனர்.

Baakiyalakshmi Serial: பாக்யா வீட்டில் நடந்த களேபரம்: படு கேவலமாக நடந்துக்கொண்ட கோபி.!

அதன்பின்னர் கண்ணம்மா தயவுசெய்து ஒரு பொண்ணு ஜெயிச்சா அவள பத்தி தப்பா பேசாதீங்க. ஒரு பொண்ணால தனியா சாதிக்க முடியாதா? இந்த மாதிரி ஆம்பளைங்க பேசுனா பரவாயில்லை. நீங்களே பேசுனா எப்படி? இனிமே யார் உங்களை பற்றி அபாண்டமா பேசுனாலும் பயப்படாதீங்க. எதிர்த்து கேள்வி கேளுங்க என பேசுகிறாள். உடனே ஊர் மக்கள் மன்னிப்பு கேட்டு தலை குனிகின்றனர்.

Baakiyalakshmi Serial: கோபியை சீண்டிய எழில்: பாக்யா வீட்டில் வெடித்த பூகம்பம்

பாண்டியை கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க சொல்ல, இவக்கிட்ட நான் மன்னிப்பு கேட்கணுமா அதெல்லாம் முடியாது என சொல்கிறான். அதன் பிறகு பாரதி கேட்க வைக்க வேண்டிய விதத்தில் கேட்க வைக்கலாம் என சொல்லி பாண்டியுடன் குஸ்திக்கு தயாராகி சண்டை போடுகிறான். பாரதியிடம் அடி வாங்கும் பாண்டி, ஒருக்கட்டத்தில் அவன் கண்ணில் மண்ணை தூவி பாரதியை அடித்து கீழே சரிய வைக்கிறான். இதனால் கண்ணம்மா அதிர்ச்சியடைகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி