ஆப்நகரம்

Bharathi Kannamma: கையும் களவுமாக சிக்கிய பாரதி: கண்ணம்மா சொன்ன விஷயம்.!

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்டில் கண்ணம்மாவை பெண் பார்க்க வரும் பாரதி கண்டிஷன் ஒன்று போடுகிறான்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 31 Jan 2023, 10:52 am
பாரதி, கண்ணம்மா இருவருக்கும் ஊரிலே வைத்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். கண்ணம்மா தனக்கு எப்படி கல்யாணம் பண்ணனும் என ஆசை ஒன்று இருப்பதாக சொல்கிறாள். இந்த கல்யாணம் லட்ச லட்சமா செலவு பண்ணி பிரம்மாண்டமா இருக்கணும்னு நான் ஆசைப்படல ஆனா மறக்க முடியாத விஷயமா இருக்கணும். இத்தனை வருஷம் துன்பத்துக்கு ஆறுதலா இருக்கணும் என கண்டிஷன் போடுகிறாள்.
Samayam Tamil Bharathi Kannamma
Bharathi Kannamma


கண்ணம்மா ஆசைப்பட்ட மாதிரி எப்படி கல்யாணம் பண்றது என யோசித்து கொண்டே இருக்கிறான் பாரதி. இரவு நேரத்தில் கண்ணம்மா தூங்கியதும் பாரதி ரூமுக்குள் செல்கிறான். கண்ணம்மா டைரி எழுதுற பழக்கம் உள்ளவ. கண்டிப்பாக அதுல ஏதாவது எழுதி வைச்சு இருப்பா என டைரியை தேடுகிறான். அப்போது கண்ணம்மா எழுந்து லட்டை போட ஷாக்காகிறான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதற்குள் கணபதியும் உள்ளே வந்துவிட ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் எழுந்து விடுகின்றனர். எதுக்காக ரூமுக்கு வந்தீங்க என கேட்க பாரதி கண்ணம்மா வித்தியாசமா கல்யாணம் பண்ணனும்னு சொன்னா. ஆனா அவளது ஆசை என்னனு எனக்கு இன்னமும் தெரியல, அதனால டைரியில ஏதாவது எழுதி வச்சிருப்பானு டைரியை எடுக்க வந்தேன் என சொல்கிறான்.

உடனே கண்ணம்மா நானே என்னோட ஆசையை சொல்றேன் என கூறுகிறாள். பசுமையாக பச்சை பசேல் என இருக்கும் இயற்கைக்கு நடுவே கல்யாணம் பண்ணி வாழ்க்கையை தொடங்கணும்னு ஆசை என கூறுகிறாள். ஹேமாவும், லஷ்மியும் எங்களுக்கும் சில ஆசைகள் இருக்கு என சொல்லி, இந்த கல்யாணம் கலர்ஃபுல்லா இருக்கணும், பொண்ணு பார்க்கிறது, நலங்கு வைக்கிறது, நிச்சயதார்த்தம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைக் கட்டணும் என்று கூறுகின்றனர்.

Baakiyalakshmi Serial: பாக்யா தலையில் இடியை இறக்கிய எழில்: பரபர திருப்பம்.!

மறுநாள் கண்ணம்மாவை பொண்ணு பார்க்க வருகின்றனர். கண்ணம்மாவிடம் பாட தெரியுமா? சமைக்க தெரியுமா எனக்கேட்டு ரகளை செய்கிறான் பாரதி. அதன்பின்னர் கண்ணம்மா அப்பாவிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லி அழைத்து வருகிறான். பொண்ணை விட்டுட்டு அப்பாக்கிட்ட என்ன பேச போறாரு என அனைவரும் ஷாக்காகின்றனர். அனைவரும் அவர்கள் பின்னாடியே வந்துவிடுகின்றனர்.

Baakiyalakshmi Serial: காலில் விழுந்து கதறிய ஈஸ்வரி: எழில் எடுத்த அதிரடி முடிவு..!

பாரதி கல்யாணமான ஒரு வருஷத்துக்குள்ள மூணாவது குழந்தை பெத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுறேன். நீங்க அதுக்கு அனுமதி தரணும் என கேட்கிறான். அதற்கு அவர் இதை நீங்க கண்ணம்மா கிட்டயே கேளுங்க என சொல்கிறார். கண்ணம்மா வெட்கப்பட, ஹேமாவும் லஷ்மியும் நமக்கு தம்பி வர்ற போறான் என சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி