ஆப்நகரம்

Bharathi Kannamma: பாரதி எடுத்த இறுதி முடிவு: கதறி அழுத கண்ணம்மா.!

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்டில் நியூயார்க் கிளம்பும் பாரதியுடன் ஹேமா, லட்சுமி இருவரும் செல்கின்றனர்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 27 Jan 2023, 10:35 am
பாரதிக்கு பழைய நியாபகங்கள் அனைத்தும் வந்ததும் நியூயார்க்கில் வேலை செய்ய தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துக்கொள்ள முடிவு செய்கிறான். கண்ணம்மாவின் ஊரில் இருந்து கிளம்ப முடிவு செய்கிறான். அனைத்தையும் பேக் செய்துவிட்டு கண்ணம்மா வீட்டுக்கு வருகிறான். அவளிடம் பேசணும் என சொல்லும் போது, எதுக்கு பேசணும். உங்களுக்கு நியாபகம் கிடைக்க உதவி செஞ்சேன். அவ்வளவு தான் என கூறுகிறாள்.
Samayam Tamil Bharathi Kannamma
Bharathi Kannamma


அதற்கு பாரதி நியாபகங்களை மீட்டு கொடுக்குறது அவ்வளவு சின்ன விஷயம் இல்லை கண்ணம்மா. அதுக்காக உனக்கு நான் நன்றி சொல்லணும். உன்னை எப்படியாவது இங்கிருந்து கூட்டி போவேன்னு சவால் விட்டேன். ஆனா யாரையும் கட்டாயப்படுத்தி நம்மக்கூட இருக்க வைக்க முடியாதுன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நான் பார்த்த கண்ணம்மாவா இதுன்னு இப்போ ஆச்சரியப்படுற அளவுக்கு நீ இருக்க. ஒண்ணுமே தெரியாதவளா உன்னை பார்த்தேன். ஆனா இப்போ தனியா குழந்தைகளை வளர்க்குற பொண்ணுங்களுக்கு நீ ஒரு முன்னுதாரனமா இருக்க. இனிமேலும் உன்னை தொந்தரவு செய்ய நான் விரும்பலை. சென்னைல இருந்தா, உன்னை தேடி வந்து நான் டிஸ்டர்ப் பண்ணுவேன். அதுனால நியூயார்க் போக முடிவு செஞ்சுட்டேன். நிரந்தரமாவே உன்னை விட்டு நான் போக போறேன்.

நீ குழந்தைகளை நல்லா பார்த்துப்பேன்ன்னு உனக்கு தெரியும். ஏதாவது உதவி வேணும்னா கேளு. நீ கேட்க மாட்டா. இருந்தாலும் சொல்றேன் எனக்கூறி, குழந்தைகளை அழைத்து அம்மா சொல்வதை கேட்டு நடக்கணும் என அட்வைஸ் பண்ணுகிறான். உடனே ஹேமா, ஏன்மா இப்படி பண்ற. அப்பா உன்க்கிட்ட மன்னிப்பு கேட்டாருல என சொல்லி அழுகிறாள். இருவரும் பாரதியை பிளைட் ஏற்றிவிட்டு இங்கு வருவதாக கூறுகின்றனர்.

Vijay Tv: கோபியை வெளுத்து வாங்கிய இராமமூர்த்தி: சின்னாபின்னமாகும் பாக்யா குடும்பம்.!

பாரதியும் பர்மிசன் கேட்க கண்ணம்மா சரியென்று கூறுகிறாள். சௌந்தர்யா, என்கிட்ட எதுவும் கேட்கக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்ட. அதுனால நான் செத்த பிணமாக தான் இங்க நிற்கிறேன் என கூறுகிறாள். கணேசன் கண்ணம்மாவிடம் போட்டோ ஆல்பம் கொடுக்கிறான். அதன்பின்னர் ஊர்க்கரர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சொல்லிவிட்டு அங்கிருந்து பாரதி குடும்பத்துடன் கிளம்புகிறான்.

Baakiyalakshmi Serial: பாக்யாவை பழிவாங்க சதி செய்யும் கோபி: கோபத்தில் கொந்தளித்த ராமமூர்த்தி.!

அவன் போனதும் கண்ணம்மா கணேஷன் கொடுத்த போட்டோ ஆல்பத்தை பிரித்து பார்க்க அதில் பாரதி, கண்ணம்மா இருக்கும் சில புகைப்படங்கள் இருக்கின்றனர். அதனை பார்த்து கண்ணம்மா கண் கலங்கி அழுக, தாமரை வந்து அட்வைஸ் பண்ணுகிறாள். அம்மா மாதிரி பார்த்துக்கிற மாமியார். தம்பி மாதிரி கொழுந்தன். உசுரையே வைச்சு இருக்க புருஷன் இவுங்களை மிஸ் பண்ணிடாத என கூறுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி