ஆப்நகரம்

Vijay Tv: இறுதியாய் தனது போராட்டத்தில் ஜெயித்த பாரதி: கண்ணம்மா போட்ட கண்டிஷன்.!

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா தனது கல்யாணத்திற்காக பாரதிக்கு கண்டிஷன் ஒன்று போடுகிறாள்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 30 Jan 2023, 10:37 am
பாரதி நிரந்தரமாக கண்ணம்மாவை விட்டு பிரிவதாக சொல்லி கிளம்ப அதனை நினைத்து அழுது கொண்டிருக்கிறாள். அவளுக்கு அட்வைஸ் பண்ணும் தாமரை, நான் ஒரு வழி சொல்றேன். கண்ண மூடி ஒரு நிமிஷம் கோபமான பாரதிய நினைச்சுக்கோ. இன்னொரு பக்கம் குழந்தைகளோட அவரோட சந்தோஷமா வாழற மாதிரி நினைச்சுக்க கடைசில எது உன் கண்ணு முன்னாடி வந்து நிற்கிறதோ அதுதான் உன்னுடைய ஆசை அதையே முடிவாய் எடு என்று சொல்கிறாள்.
Samayam Tamil Bharathi Kannamma
Bharathi Kannamma


கண்ணம்மாவும் அதே போல் யோசிக்க கண்ணம்மாவிற்கு பாரதி குழந்தைகளுடன் சேர்ந்து வாழுவது பிடிக்கிறது. பிறகு பாரதியை தேடி போகிறாள். அவனை சந்தித்து பேசும் கண்ணம்மா, நமக்குள் நடந்த பிரச்சனைகள் கசப்பான சம்பவங்கள் எல்லாத்தையும் மறந்துடலாம். நானும் தோற்கல நீங்களும் தோற்கல நம்முடைய காதலும் அன்பும் ஜெயித்து விட்டதாக சொல்கிறாள். இத்னைக்கேட்டு பாரதி உட்பட குழந்தைகள் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன்பின்னர் அனைவரும் கண்ணம்மா வீட்டுக்கு திரும்பி வந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். ஊர்க்காரர்களும் சந்தோஷப்படுகின்றனர். எப்போ சென்னைக்கு கிளம்ப போறீங்க என கேட்க, சீக்கிரம் போகணும் போய் கல்யாண வேலைகளை பார்க்கணும் என சௌந்தர்யா சொல்கிறாள். அப்போது கணபதி ஏன் இந்த ஊரிலேயே கல்யாணத்தை வைக்க கூடாது என கேட்கிறான்.

இந்த ஐடியா அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கண்ணம்மா தனக்கு எப்படி கல்யாணம் பண்ணனும் என ஆசை ஒன்று இருப்பதாக சொல்கிறாள். இந்த கல்யாணம் லட்ச லட்சமா செலவு பண்ணி பிரம்மாண்டமா இருக்கணும்னு நான் ஆசைப்படல ஆனா மறக்க முடியாத விஷயமா இருக்கணும். இத்தனை வருஷம் துன்பத்துக்கு ஆறுதலா இருக்கணும் என கண்டிஷன் போடுகிறாள்.

Baakiyalakshmi Serial: காலில் விழுந்து கதறிய ஈஸ்வரி: எழில் எடுத்த அதிரடி முடிவு..!

சௌந்தர்யாவும் இத்தனை வருஷத்துல கண்ணம்மா தனக்குன்னு ஒன்னு கேட்டு இருக்கா. அவ ஆசைப்பட்ட மாதிரி கல்யாணத்தை வித்தியாசமா நடத்திடு என சொல்கிறாள். அதன்பின்னர் கல்யாணத்தை எப்படி நடத்துவது என யோசித்து குழம்புகிறான் பாரதி. அகிலன், அஞ்சலி, கணபதி அனைவரிடமும் இதற்காக ஐடியா கேட்க, அவர்கள் மிரண்டு ஓடுகின்றனர்.

பாரதி நானே யோசிச்சு வித்தியாசமா கல்யாணத்தை பண்றேன் என யோசிக்கிறான். அதன்பின்னர் இரவு நேரத்தில் கண்ணம்மா தூங்கியதும் பாரதி ரூமுக்குள் செல்கிறான். கண்ணம்மா டைரி எழுதுற பழக்கம் உள்ளவ. கண்டிப்பாக அதுல ஏதாவது எழுதி வைச்சு இருப்பா என டைரியை தேடுகிறான். அப்போது கண்ணம்மா எழுந்து லட்டை போட ஷாக்காகிறான் பாரதி. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Baakiyalakshmi Serial: பாக்யா சொன்ன ஒத்த வார்த்தை: கோபத்தில் கொந்தளித்த கோபி.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி