ஆப்நகரம்

Bharathi Kannamma: படுகேவலமாக நடந்துக்கொண்ட பாண்டி: ஓங்கி அறைவிட்ட கண்ணம்மா.!

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வரும் லட்சுமியை கண்டப்படி திட்டி வெளியில் போக சொல்கிறாள் ஹேமா.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 9 Jan 2023, 10:34 am
கண்ணம்மாவை வழி மறித்து பேசும் பாண்டி, எதாவது ஒரு வகையில் உன்னுடன் பார்ட்னராக இருக்க விரும்புவதாக கூறுகிறான். இதனால் கோபத்தில் கொந்தளித்த கண்ணம்மா பளாரென அறைந்து, உன் வேலையெல்லாம் என்கிட்ட வைச்சுக்காத. இன்னொரு தடவை இப்படி நடந்துக்கிட்ட அவ்வளவுதான் என எச்சரித்து விட்டு வீட்டுக்கு கோபமாக வருகிறாள்.
Samayam Tamil Bharathi Kannamma
Bharathi Kannamma


வீட்டுக்கு வந்து பையை தூக்கி எறிந்து கடுப்பில் உட்கார்ந்து இருக்கிறாள். அவளிடம் தாமரை என்னாச்சு கண்ணம்மா. எதுக்காக இப்படி உட்கார்ந்து இருக்க என கேட்கிறாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை என சொல்லவும் அவளுக்கு தண்ணீர் எடுத்துட்டு வந்து கொடுக்கிறாள். அவளிடம் மறுபடியும் டாக்டர் எதுவும் பேசுனாரு. அன்னைக்கு மாதிரி கையை பிடிச்சு இழுத்தாரா என கேட்கிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவளிடம் அதெல்லாம் இல்லை என நடந்த விஷயங்களை கூறுகிறாள் கண்ணம்மா. பாண்டியை அறைந்ததை நினைத்து ஷாக்காகும் தாமரை, அந்த பாண்டி ரொம்ப மோசமானவன். இனிமேதான் அவன்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் என கூறுகிறாள். இதனிடையில் ஞாயிற்றுக்கிழமை முடிந்தால் லட்சுமியை வீட்டுக்கு அனுப்பு வைக்கிறான் பாரதி.

அவள் அழுது கொண்டே நான் போகலை. உங்ககூடவே இருக்கேன் என்கிறாள். அவளை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறான் பாரதி. லஷ்மி வீட்டுக்கு வந்ததும், உன்னை யார் இங்க வர சொன்னது. நீ அம்மாவுக்கு துரோகம் பண்ணி இருக்க என ஹேமா கண்டபடி திட்டுகிறாள். லட்சுமி கண்ணம்மாவிடம் அழுது கொண்டே எனக்கு நீ அப்பா ரெண்டு பேருமே வேணும். உனக்கு நான் வந்தது பிடிக்கலையா? என்மேல கோபமா என்க்கேட்கிறாள்.

Baakiyalakshmi Serial: நடுரோட்டில் வைத்து அசிங்கப்படுத்திய எழில்: அடிக்க பாய்ந்த கோபி.!

உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை. ஐ லவ் யூ லட்சுமி என கண்ணம்மா சொல்ல லட்சுமி கட்டிப்பிடித்துக் கொள்கிறாள். இவளுக்கு போய் ஐ லவ் யூ சொல்றீங்க என ஹேமா கோபப்பட்டு எழுந்து சென்று விடுகிறாள். இந்தப்பக்கம் பாண்டி தனது நண்பர்களுடன் சரக்கடித்து பேசிக்கொண்டிருக்கும் போது, கண்ணம்மாவை அசிங்கப்படுத்த திட்டம் ஒன்று போடுகிறான். தொடாமலே அவளை அசிங்கப்படுத்தணும் என முடிவு செய்கிறான்.

மறுநாள் காலையில் திட்டம் போட்டபடி பாண்டி கல்யாண மண்டபத்தில் மணமகன் அறைக்குள் தங்குகிறான். இந்தப்பக்கம் சமைத்து கொண்டிருக்கும் கண்ணம்மா ஸ்வீட் செய்வதற்கான பொருளை எடுக்க பாண்டி இருக்கும் அறைக்கு செல்ல கிளம்புகிறாள். அதற்குள் அவன் பிரெண்ட்ஸ், கண்ணம்மா ரூமுக்கு வர, இன்னைக்கு சான்சை மிஸ் பண்ணிடாத என கூறுகின்றனர். பாண்டியும் இன்னைக்கு எப்படியாவது கண்ணம்மாவை அசிங்கப்படுத்திடனும் என முடிவோடு இருக்கிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Baakiyalakshmi Serial: ராதிகாவுடன் பாக்யா வீட்டுக்கு வந்த கோபி: அடிக்க பாய்ந்த இராமமூர்த்தி.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி