ஆப்நகரம்

Bharathi Kannamma: இதென்ன புது உருட்டா இருக்கே: பாரதி கண்ணம்மா சீரியலில் புது ட்விஸ்ட்.!

பாரதி கண்ணம்மா சீரியலில் யாரையுமே நியாபகமில்லை என பாரதி சொல்வதால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 18 Jan 2023, 10:42 am
கண்ணம்மாவிடம் அப்பாவை பார்க்க வேண்டும் என இரண்டு குழந்தைகளும் கேட்கின்றனர். அதன்பின்னர் ஹாஸ்பிட்டல் போகலாம் என முடிவு செய்யும் கண்ணம்மா, தாமரையையும் அழைத்துக்கொண்டு கிளம்புகிறாள். ஹாஸ்பிட்டல் வந்ததும் ஹேமா லட்சுமி இருவரும் ஓடி வந்து சௌந்தர்யாவிடம் டாடி எப்படி இருக்காரு என கேட்க சௌந்தர்யா கண்கலங்கி அழுகிறாள்.
Samayam Tamil Bharathi Kannamma
Bharathi Kannamma


அதன்பின்னர் அனைவரும் பாரதியை பார்க்க உள்ளே செல்கின்றனர். ஹேமா லட்சுமி என இருவரும் பாரதியை பார்த்தும் டாடி எழுந்திருங்க என கதறி அழுகின்றனர். பாரதி கண் விழிக்காமல் இருக்கிறார். பிறகு இருவரும் கோவில் பிரசாதத்தை நெற்றியில் வைத்து விடுகின்றனர். சௌந்தர்யா கண்ணம்மாவையும் விபூதி வைக்க சொல்ல அவள் மாட்டேன் என மறுத்துவிடுகிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன்பின்னர் டாக்டரிடம் பாரதியின் நிலை குறித்து கேட்க அவர் கிரிட்டிக்கலா தான் இருக்கார். எங்களால் முடிந்த பெஸ்ட் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கோம். ஒரு நியூராலஜி டாக்டர் ஒருத்தரை வர வைக்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம் என சொல்லும் போது, சௌந்தர்யா எங்களுக்கு தெரிந்த ஒரு நியூராலஜி டாக்டர் இருக்கார், அவரை வரவைக்கிறோம் என சொல்கிறாள்.

பிறகு கண்ணம்மா குழந்தைகளை கூட்டிக்கொண்டு அங்கிருந்து வீட்டுக்கு கிளம்புகிறாள். சௌந்தர்யா இருக்க சொல்லும் போது எதுவா இருந்தாலும் போன் பண்ணுங்க அத்தை என சொல்லிவிட்டு வீட்டுக்கு போகிறாள். வந்ததும் தனியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து பாரதியை பற்றி யோசித்து கொண்டிருக்கிறாள். அப்போது தாமரை அங்கு வந்து பாரதி மேல உனக்கு இன்னமும் காதல் இருக்கு. புருஷனுக்கு ஒன்னுன்னா உனக்கு துடிக்குதுல என சொல்கிறாள்.

Baakiyalakshmi Serial: கடும் சிக்கலில் எழில்: வர்ஷினி போடும் புதிய திட்டம்.!

ஆனால், கண்ணம்மா அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. இருந்தாலும் அவருடைய நிலைமையை நினைச்சு வருத்தமா இருக்கு என சொல்கிறாள். மறுநாள் பாரதியுடன் வேலை பார்த்த நியூராலஜி டாக்டர் ஹாஸ்பிட்டலுக்கு வருகிறார். அப்போது கண் விழிக்கும் பாரதி, அனைவரையும் பார்த்து யாரையுமே அடையாளம் தெரியவில்லை என கூறுகிறான். இதனால் சௌந்தர்யா உள்ளிட்ட அனைவரும் அத்ர்ச்சியடைகின்றனர்.

பாரதிக்கு உண்மை தெரிந்த போதே முடிவுக்கு வரும் என நினைத்த சீரியல் தற்போது நியாபக மறதி என வேற டிராக்கில் செல்வதை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த சீரியலுக்கு எண்ட் கார்டு போட வாய்ப்பே இல்லை. இதெல்லாம் புது புது உருட்டா இருக்கே என கமெண்ட் அடித்து வருகின்றனர் பாரதி கண்ணம்மா ரசிகர்கள்.

Baakiyalakshmi Serial: பாக்யாவுக்கு எதிராக கோபி செய்த மட்டான காரியம்: சவால் விட்ட எழில்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி