ஆப்நகரம்

Bharathi Kannamma: கல்யாண பத்திரிக்கையுடன் வீட்டுக்கு வந்த பாரதி: கதறி அழுத லஷ்மி.!

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்டில் பாரதிக்கு போன் போட்டு பேசும் லஷ்மி எதுக்காக கண்ணம்மாவுக்கு விவாகரத்து கொடுத்தீங்க எனக்கேட்டு கதறி அழுகிறாள்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 31 Dec 2022, 10:30 am
பாரதி, கண்ணம்மா இடையில் விவாகரத்து நடந்த விஷயம் தெரிந்து கடும் அதிர்ச்சியடைகிறாள் லஷ்மி. இனிமே அவர் நம்மள டிஸ்டர்ப் பண்ண மாட்டாருல என ஹேமா கேட்கிறாள். இல்லை என சொல்லும் கண்ணம்மா குழந்தைங்க ஆசைப்பட்ட வாரத்துக்கு ஒருமுறை அவரை பார்க்கலாம் என கூறுகிறாள். அதற்கு ஹேமா நாங்க ஏன் ஆசைப்பட போறோம். எங்களுக்கு அவரை பார்க்கவே வேணாம் என சொல்லிவிடுகிறாள்.
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா


லஷ்மி மட்டும் வருத்தத்துடன் அங்கிருந்து எழுந்து செல்கிறாள். அதன்பின்னர் தாமரையிடம் போனை வாங்கி பாரதிக்கு பேசுகிறாள். அழுது கொண்டே எதுக்காக நீங்க டைவர்ஸ் கொடுத்தீங்க. நான் அவ்வளவு சொன்னேன்ல என கேட்க அவ டைவர்ஸ்காக தான ஆசைப்பட்டா, அதான் கொடுத்தேன் என்கிறான். ஆனால் லஷ்மி எல்லாரும் அவுங்க அம்மா, அப்பாவோட இருக்காங்க. எனக்கு அப்படிலாம் இருக்க ஆசை இருக்காதா என கேட்கிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன்பின்னர் பாரதியிடம் நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது. எப்படியாவது அம்மாவை சமாதானம் செஞ்சு நீங்க, நான், அம்மா, ஹேமா எல்லாரும் ஒரே வீட்ல தங்கி சந்தோஷமா இருக்கணும் என கூறுகிறாள். பாரதியும் நீ கவலைப்படாதம்மா. நான் ஏதாவது பண்ணி கண்ணம்மா மனசை மாத்திருவேன் என சொல்கிறான். அப்போது அங்கு வரும் கணேஷன் என்ன டாக்டர் சோகமா இருக்கீங்க என கேட்கிறான்.

ஒரு வழியாக ஐடியா யோசிச்சு தனக்கு கண்ணம்மாவுக்கும் மறுபடியும் கல்யாணம் நடப்பதை போல் பத்திரிகை ரெடி பண்ணி கண்ணம்மா வீட்டுக்கு வருகிறான். அவளிடம் எனக்கு கல்யாணம் என சொல்லி அவன் பத்திரிக்கையை நீட்ட கண்ணம்மா அதிர்ச்சியடைகிறாள். உடனே அவளிடம் என்ன எனக்கு கல்யாணம் சொன்னவுடனே ஷாக் ஆகுற என கேட்க எனக்கு என்ன கவலை என சொல்லி பத்திரிக்கையை வாங்குகிறாள். அதனை பிரித்து பார்க்க சொல்கிறான் பாரதி. அதில் தனது பெயர் இருப்பதை பார்த்து ஷாக்காகுகிறாள்.

Baakiyalakshmi Serial: பாக்யாவை பாராட்டி தள்ளிய கோபி: கடும் கோபத்தில் ராதிகா.!

உனக்காக நான் லவ்வர்ஸ் டே வரைக்கும் டைம் கொடுக்குறேன். அதுக்குள்ள உன் மனசு ஓரத்துல என்னை மன்னிக்கணும் எண்ணம் இருந்தா என்கிட்ட திரும்பி வா. இல்லன்னா நான் அதே தேதில வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன் என சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்புகிறான். அதன்பின்னர் கண்ணம்மா வீட்டுக்கு வெளியில் இருக்கும் போது விசில் அடித்து கூப்பிடுகிறான் பாரதி. அவளுக்கு காதில் விழாததால் பேப்பரில் எழுதி ராக்கெட் விடுகிறான்.

Baakiyalakshmi Serial: வர்ஷினியை கடுமையாக எச்சரித்த எழில்: ஈஸ்வரியின் அதிரடி முடிவு.!

அவளிடம் வந்து பேசும் போது என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா என கத்த ஆரம்பிக்கிறாள் கண்ணம்மா. அவளிடம் நாளைக்கு காலைல சூரியன் உதயத்திலிருந்து சூரியன் மறைகிற வரைக்கும் நீ என்ன பத்தி நினைக்காம இருக்கணும் என சொல்ல, கண்ணம்மா இந்த சவால்ல நான் ஜெயிச்சுட்டா நீங்க இந்த ஊரை விட்டு கிளம்பனும் என்கிறாள். பாரதியும் இந்த சவாலுக்கு ஓகே சொல்கிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி