ஆப்நகரம்

Bharathi Kannamma: கையும் களவுமாக சிக்கிய வெண்பா: அதிரடியாய் கைது செய்த போலீஸ்.!

பாரதி கண்ணம்மா நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 3 Dec 2022, 10:36 am
வெண்பா வீட்டுக்கு வரும் போலீஸ் அவளை கைது செய்கின்றனர். நான் என்ன பண்ணேன் என அதிர்ச்சியுடன் வெண்பா கேட்க, ஹேமாவை கடத்துனது நீதானா? வா என கூறுகின்றனர். வெண்பாவும், ஷர்மிளா என்ன சொல்றீங்க சார். வெண்பா அதெல்லாம் பண்ணி இருக்க மாட்டா, விடுங்க என கெஞ்சுகின்றனர். ஆனால் போலீஸ் விடாமல் அவளை கைது செய்கின்றனர்.
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா


இதனால் அலறி அடித்து கொண்டு எந்திரிக்கும் வெண்பாவிற்கு அதன்பிறகு தான் புரிகிறது இது கனவு என்று. அவள் சத்தம் கேட்டு சாந்தியும் அங்கு வர என்னாம்மா ஆச்சு? எதுக்காக இவ்வளவு பதட்டமா இருக்கீங்க என கேட்கிறாள். அதன்பின்னர் அவளிடம், அந்த ஹேமாவை கண்ணம்மா குரூப் காப்பாத்துனதுல இருந்து, ஒரே கெட்ட கனவா வருது. இப்போ கூட போலீஸ் அரெஸ்ட் பண்ற மாதிரி கனவு வருது என புலம்புகிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஹேமாவை கொல்லனும்னு நான் எடுத்த முடிவை மாத்தி இருக்கக்கூடாது என கோபத்தில் பக்கத்திலிருந்து கண்ணாடி கிளாசை உடைக்கிறாள். இதனால் அவள் கையில் காயம் ஏற்பட்டு கத்த, சத்தம் கேட்டு ரோஹித்தும் ஷர்மிளாவும் அங்கு வருகின்றனர். உடனே அவளை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு அட்மிட் செய்த பிறகு சாந்தி பதட்டத்துடன் அங்கு வருகிறாள்.

என்னாச்சு? எதுக்காக இவ்வளவு பதட்டமா இருக்க என கேட்க, அந்த ஹேமாவும் இங்க தான் அட்மிட் ஆகி இருக்கா. அவ தலைல அடிப்பட்டிருக்க போல என சொல்ல, வெண்பா சந்தோஷப்படுகிறாள். அவளை எதுவும் பண்ணலன்னு கவலைப்பட்டேன். ஆனா மண்டைலயே நாலு கொடுத்து இருக்கான்க என மகிழ்ச்சியுடன் கூறுகிறாள். ஆனால் சாந்தி வருத்தத்துடன், உங்க ராசிக்கு நேரமே சரியில்லைன்னு போட்டு இருக்கும்மா. ஜெயிலுக்கு போவீங்கன்னு வேற போட்ருக்கு என கூறுகிறாள்.

Baakiyalakshmi Serial: எழில், அமிர்தா காதலை சேரவே விட மாட்டேன்: கிளம்பிய அடுத்த பூகம்பம்.!

ஆனால் வெண்பா அதை கண்டுகொள்ளாமல் உளறாத என கூறுவிடுகிறாள். இதனிடையில் லஷ்மி, அம்மாவுக்கும், அப்பாவுக்கு என்னதான் பிரச்சனை. பேசாம தாத்தா பாட்டிக்கிட்ட கேப்போம். அவுங்கதான் உண்மையை சொல்லுவாங்க என முடிவு செய்து அவர்களிடம் சென்று கேட்கிறாள். எனக்கு என் அப்பா என்னை தூங்கி கொஞ்சணும் ஆசை இருக்காதா? எதுக்காக அம்மா ஹேமாகிட்டயும் உண்மையை சொல்ல மாட்றாங்க என கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள்.

Baakiyalakshmi Serial: ராதிகாவிற்கு எதிரியாய் மாறும் இனியா: பாக்யா எடுக்கும் புது அவதாரம்.!

இதனால் ஷாக்காகின்றனர் சௌந்தர்யாவும், வேணுவும். நீ சின்ன பொண்ணு. உன்கிட்ட எப்ப எல்லாத்தையும் சொல்லணும்னு அம்மாவுக்கு தெரியும் என சொல்ல, கதறி அழுகிறாள் அவள். அதன்பின்னர் லஷ்மியை பக்கத்தில் உட்கார வைத்து அறிவுரை சொல்லி, இனிமேல் அம்மாக்கிட்ட இதைப்பத்தி கேட்கக்கூடாது என சத்தியம் வாங்குகிறான் வேணு. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி