ஆப்நகரம்

கொரோனாவை தடுக்க களத்தில் இறங்கிய பிக் பாஸ் ஆரி.. என்ன செஞ்சிருக்காரு பாருங்க

கொரோனா இரண்டாம் அலை தற்போது பரவி வரும் சூழலில் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரி பேரணி நடத்தி உள்ளார்.

Samayam Tamil 12 Apr 2021, 10:23 pm
மாஸ்க் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரி விழிப்புணர்வு பேரணி நடத்தி உள்ளார்.
Samayam Tamil bigg boss 4 winner aari arjunan creates awareness about wearing mask
கொரோனாவை தடுக்க களத்தில் இறங்கிய பிக் பாஸ் ஆரி.. என்ன செஞ்சிருக்காரு பாருங்க


பிக் பாஸ் ஆரி

பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஆரி. அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது அதிகம் நேர்மையாக நடந்துகொண்டது ரசிகர்கள் அதிகம்பேரை கவர்ந்தது. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அவர் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் லிஸ்டில் இருந்தார். ஆனால் ரசிகர்கள் அவருக்கு ஒட்டுபோட்டு காப்பாற்றி வந்தனர்.

இறுதி போட்டியிலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தது. அவருக்கு 16 கோடி வாக்குகளுக்கு மேல் கிடைத்து இருந்தது. இரண்டாம் இடம் பெற்ற பாலாஜியை விட கிட்டத்தட்ட 10 கோடி வாக்குகள் ஆரி அதிகமாக பெற்றார்.

சமூக அக்கறை

பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு சமூக அக்கறை உடன் அவர் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவரது பதிவுகளும் அப்படி தான் இருக்கும்.

மேலும் சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற போது அனைவரும் வாக்களிக்க வேண்டும், பிரச்சாரத்திற்கு செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறி விளம்பரத்திலும் நடித்து இருந்தார்.

மேலும் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வந்திருந்த அவர் கூட்டு குடும்பம் பற்றியும், உறவுகள் பற்றியும் பேசி அனைவருக்கும் அட்வைஸ் கொடுத்து இருந்தார்.

கொரோனா விழிப்புணர்வு

இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்புக்காக அனைவரும் தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த கோயம்புத்தூரில் விழிப்புணர்வு பேரணி நடத்தி உள்ளார். மேலும் வீதியில் இறங்கி அவர் அனைவருக்கும் மாஸ்க் கொடுத்து இருக்கிறார்.

அதன் வீடியோவையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

வீடியோ

View this post on Instagram A post shared by Aari Arujunan (@aariarujunanactor)

வீடியோ

அடுத்த செய்தி