ஆப்நகரம்

சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது! இந்த ஊர் கல்லூரி மாணவர் தான்

நடிகை சனம் ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப்பில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பிய நபரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவர் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் என்பது தெரியவந்திருக்கிறது.

Samayam Tamil 7 Jul 2021, 1:04 am
மாடலிங் துறையில் கலக்கி அதன் பின் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்து இருந்தாலும், நடிகை சனம் ஷெட்டி பிக் பாஸ் மூலமாக தான் அதிகம் ரசிகர்களை ஈர்த்தார். ஆரம்பத்தில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் அதிகம் வந்தாலும் ஷோ நகர நகர சனம் ஷெட்டிக்கும் ஆதரவு அதிகம் ஆனது. அவர் எலிமினேட் ஆன போது அது தவறான எலிமிநேஷன் எனவும் அவர்கள் குரல் கொடுத்தனர்.
Samayam Tamil Sanam Shetty


சனம் ஷெட்டி சமூக வலைதளங்களில் அதிகம் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். அவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சனம் ஷெட்டி சமீபத்தில் சென்னை அடையார் போலீசில் அளித்த புகாரில் ஒரு மர்ம நபர் தனக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பி வருவதாக கூறி இருந்தார்.

அந்த புகாரை சைபர் க்ரைம் போலீசுக்கு மாற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் திருச்சியை சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவர் ராய் ஜான் பால் தான் சனம் ஷெட்டிக்கு தவறான மெசேஜ்கள் அளித்து வந்தது என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி