ஆப்நகரம்

சீரியல் பெயரையே திடீரென மாற்றிய சேனல்! ஏன் இப்படி?

மாங்கல்ய தோஷம் என்ற சீரியல் தற்போது மாங்கல்ய சந்தோசம் என பெயர் மாற்றம்

Samayam Tamil 9 Oct 2020, 5:20 pm
வழக்கமாக டிவி சீரியல் என்றாலே அதற்கு ரசிகர்கள் மிக அதிகம். குடும்ப ரசிகர்களை கவர்வதற்காக விதவிதமான கதைகள் கொண்ட சீரியல்களை டிவி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு உருவாக்கிக் கொடுத்து வருகிறார்கள். அப்படி சின்னத்திரையில் ஹிட் ஆகும் சீரியல்கள் பல வருடங்கள் ஓடும் என்பதால் அதில் முக்கிய ரோல்களில் நடிக்கும் நடிகர்கள் அடிக்கடி மாற்ற வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். ‘அவருக்கு பதில் இவர்’ என்று கூறி இதை அவர்கள் செய்வார்கள். சின்னத்திரை ரசிகர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
Samayam Tamil Maangalya Dhosham


இப்படி சீரியல்களில் நடிகர்களை மட்டும் அவ்வப்போது மாற்றி வந்த காலம் போய் தற்போது சீரியல் பெயரையும் அடிக்கடி மாற்றம் செய்யும் பாணி தொடங்கியிருக்கிறது. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாங்கல்ய தோஷம் என்ற சீரியல் நேற்று 100வது எபிசோடு என்ற மைல்கல்லை கடந்து இருக்கிறது. அதை கொண்டாடும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர். மேலும் ஒரு முக்கிய அறிவிப்பையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். மாங்கல்ய தோஷம் என்ற சீரியல் பெயர் இனி மாங்கல்ய சந்தோஷம் என மாற்றியிருக்கிறார்கள்.

View this post on Instagram இனி உங்க fav மாங்கல்ய தோஷம் இன்று முதல் 'மாங்கல்ய சந்தோஷம்' - ஆக 😊😊 #MaangalyaSandhosham திங்கள் - வெள்ளி இரவு 9 மணிக்கு நம்ம கலர்ஸ் தமிழில் #TharuNithya #ColorsTamil #MangalyaDosham @arunrpadmanabhan_actor @lakshmipriyaoffl @keerthivijay_official @ravietej24 A post shared by Colors Tamil (@colorstvtamil) on Oct 7, 2020 at 11:49pm PDT

இந்த சீரியலில் சரண் மற்றும் நித்யா ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் தான் இப்படி ஒரு மாற்றத்தை டிவி அறிவித்திருக்கிறது. இந்த சீரியலின் ஹீரோ அருண் பத்மநாபன் ஒரு வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார். அது மட்டுமன்றி சீரியல் டைட்டில் மாற்றப்பட்ட இருப்பது பற்றியும் அவர் வீடியோவில் பேசியிருக்கிறார் இதோ.

View this post on Instagram Thank you allllll...... 😍😍😍😍😘😘 @lakshmipriyaoffl @keerthivijay_official @sumi.aryanandha @tricoloursentertainment @colorstamilfamily @tamilserialsexpress @tamiltvworld @tamiltvexpresss @exclusivetamil_shows @mangalya_dosham_ @mangalya_dosham_fc @manglaya_santhosam_addicted_fc @manglaya_santhosam_addicted_fc A post shared by Arun R Padmanabhan (@arunrpadmanabhan_actor) on Oct 8, 2020 at 2:46am PDT

கலர்ஸ் தமிழ் சேனல் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதை பார்த்த நெட்டிசன்கள், ‘ஏன் இப்படி செய்தீர்கள்?’ என கமென்ட்டில் கேட்டு வருகிறார்கள்.

அடுத்த செய்தி