ஆப்நகரம்

சூர்யா தேவி ரௌடிகளுடன் வீடு புகுந்து தாக்கினார்.. நடுரோட்டில் அம்மணமாக ஓடினேன்: நாஞ்சில் விஜயன்

நடிகர் நாஞ்சில் விஜயனை இரவில் ரௌடிகள் வீடு புகுந்து தாக்கி இருக்கின்றனர். அவர் காயமடைந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

Samayam Tamil 13 Oct 2020, 4:01 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிகம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். சில மாதங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நேரத்தில் அது பற்றி கடுமையாக இணையத்தில் விமர்சித்தவர்களில் நாஞ்சில் விஜயனும் ஒருவர். அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் வனிதா பற்றி பதிவிட்டு வந்த நிலையில், ஒரு கட்டத்தில் வனிதாவிடம் சமரசம் ஆனார்.
Samayam Tamil Nanjil Vijayan attacked


வனிதா விஜயகுமார் திருமணம் பற்றி மிக பரபரப்பாக இணையத்தில் வாதங்கள் நடந்த நிலையில் யூடியூப் பிரபலம் சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் உள்ளிட்டவர்கள் இணைந்து தான் அவர்கள் மீது விமர்சனங்களை வைத்தார்கள். இது தொடர்பாக வனிதா போலீசில் புகார் அளித்து இருக்கிறார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டு அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். நாஞ்சில் விஜயன் youtube சேனல் நடத்தி வரும் நிலையில் அவர் தன்னுடைய வீட்டிலேயே ஷூட்டிங் செய்து கொண்டு இருந்தார். அவருடன் சீரியல் நடிகை சீபாவும் இருந்திருக்கிறார். அப்போது அங்கு திடீரென சூர்யா தேவி உடன் வந்த ரவுடிகள் அவர்களை தாக்கியிருக்கிறார்கள். இதில் காயமடைந்த நாஞ்சில் விஜயன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இது பற்றி சென்னை வளசரவாக்கம் போலீசில் நாஞ்சில் விஜயன் புகார் அளித்திருக்கிறார். அது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடந்து வருகிறார்கள். தன் வீட்டில் போலீசார் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் நாஞ்சில் விஜயன். மேலும் தான் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அவற்றைப் பார்த்து பலரும் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

View this post on Instagram A post shared by Nanjilvijayan (@nanjilvijayan) on Oct 11, 2020 at 12:42pm PDT

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார், என்னை அம்மணமாக ஓட விட்டார்கள் எனவும் கூறி இருக்கிறார். சூர்யா தேவியை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது என்றும் நாஞ்சில் விஜயன் கூறி இருக்கிறார்.

அடுத்த செய்தி