ஆப்நகரம்

கர்ப்பமாக இருக்கிறாரா குக் வித் கோமாளி மணிமேகலை: அவரே அளித்த அதிர்ச்சிகரமான பதில்.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மணிமேகலை இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 1 Apr 2023, 8:30 pm
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியான இதன் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனில் இருந்து அண்மையில் மணிமேகலை விலகினார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
Samayam Tamil மணிமேகலை
மணிமேகலை


குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் மன அழுத்தத்தை குறைத்தது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தின் போது பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்தனர். இந்த நிகழ்ச்சிக்காக தனியொரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி கலகலப்பாக செல்வதற்கு காரணமே அதில் வரும் கோமாளிகள் தான். அந்தளவிற்கு தாங்கள் அடிக்கும் லூட்டிகளால் ரசிகர்களை கன்னாபின்னாவென்று சிரிக்க வைப்பார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, சுனிதா, குரேஷி ஆகியோர் வலம் வந்தனர்.

இவர்களால் குக் வித் கோமாளி செட்டே கலகலப்பில் மூழ்கும். இதில் வெள்ளித்திரையில் நுழைந்த காரணத்தால் கடந்த மூன்றாவது சீசனில் புகழ் அவ்வளவாக கலந்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து தற்போது நான்காவது சீசனில் மீண்டும் கலந்துக்கொள்ள ஆரம்பித்துள்ளார் புகழ். இந்நிலையில் திடீரென மணிமேகலையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

ராதிகாவால் தற்கொலைக்கு முயன்ற இனியா: பதறியடித்து ஹாஸ்பிட்டல் ஓடிய கோபி.!

இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் இவர் திடீரென ஏன் விலகினார் என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் மணிமேகலையும் அவரது கணவர் ஹுசைனும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது மணிமேகலையிடம் ரசிகர் ஒருவர் நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அவர் அப்படியெல்லாம் இல்லை. நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதெல்லாம் வதந்தி. என்னைப்பற்றி எந்த செய்தியா இருந்தாலும், அது ஏதோ யூடிப் சேனல் சொல்லி உங்களுக்கு தெரியுற மாதிரி இருக்காது. நானே தான் அதனை சொல்வேன் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதில் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஜீவா செய்த காரியத்தால் கதிரை அடிக்க பாய்ந்த மூர்த்தி: அடுத்த அதிர்ச்சி.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி