ஆப்நகரம்

Pavithra Lakshmi: கண்ணீருடன் 'குக் வித் கோமாளி' பவித்ரா லட்சுமி பகிர்ந்த பதிவு: ரசிகர்கள் சோகம்.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 24 May 2023, 8:07 am
சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இல்லை எனலாம். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி அந்தளவிற்கு பிரபலம். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்த பலரும் திரையுலகிலும் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil பவித்ரா லட்சுமி
பவித்ரா லட்சுமி


மாடல், டான்ஸ், பேஷன் டிசைனர் என கலைத்துறையில் பல முகங்களை கொண்டவர் பவித்ரா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. இதற்கு முன்பாகவே விஜய் டிவியில் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?' நிகழ்ச்சி ஆடிஷனில் கலந்துக்கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து கலைஞர் டிவியில் பிரபலமான 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவருக்கு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை தேடி கொடுத்தது. இரண்டாம் சீசனில் பங்கேற்ற இவர் 'நாய் சேகர்' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாகவும் அறிமுகமானார்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், இன்றுடன் 7 நாட்கள் ஆகிவிட்டது. நான் இதை இன்னும் என்னுடைய தலையில் ஏற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன். ஏன் இவ்வளவு சீக்கிரம் நீங்கள் என்னை விட்டு போக வேண்டும். நீங்கள் சந்தித்த ஐந்து வருட போராட்டமும், வழியும் இனி நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்காது என்பதுதான் எனக்கு ஆறுதல்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்: அண்ணனுடன் சேர துடிக்கும் தம்பிகள்: அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா.!

நீங்கள் எப்போதும் ஒரு சூப்பர் மாம். உண்மையில் சூப்பர் வுமன். சிங்கிள் பெற்றோராக இருப்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. ஆனால் நீங்கள் அதை செய்தீர்கள். நீங்கள் ஒருமுறை பேசுவதை, ஒருமுறை சாப்பிடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆனால் நீங்கள் என்னை வேறு வழியின்றி விட்டுவிட்டீர்கள். தயவுசெய்து எப்போதும் என் பக்கத்தில் இருங்கள் என நான் இப்போது கேட்கிறேன்.

பாக்கியலட்சுமி சீரியல்: ராதிகாவுக்கு ஆப்பு வைத்த பாக்யா: கோபத்தில் கொந்தளித்த ஈஸ்வரி.!

இந்த நேரத்தில் நான் தேர்ந்தெடுத்த குடும்பமாக என் பக்கம் நின்ற அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். நீங்கள் இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன் என்று தெரியவில்லை. அம்மா மரணம் தொடர்பான அழைப்புகளுக்கு பதிலளிக்காததிற்கு மிகவும் வருந்துகிறேன் என ஒரு நீண்ட பதிவை பகிர்ந்துள்ளார் பவித்ரா லட்சுமி. இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

View this post on Instagram A post shared by Pavithralakshmi (@pavithralakshmioffl)
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி