ஆப்நகரம்

சித்ரா வீடியோ பார்த்தேன், கண்ணீரை அடக்க முடியவில்லை: லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

சித்ராவின் வீடியோக்களை பார்த்தேன், கண்ணீரை அடக்க முடியவில்லை என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் கூறி உள்ளார்.

Samayam Tamil 14 Dec 2020, 12:36 pm
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா கடந்த வாரம் அவரது ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் தற்கொலை செய்தபோது அவரது கணவரும் அதே ஹோட்டல் அறையில் தான் தங்கி இருந்தார் என்பதால் அவரிடம் போலீசார் தற்போது துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil VJ Chitra


இந்நிலையில் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் சித்ரா மரணம் பற்றி மிகவும் உருக்கமாக பதிவிட்டு வருகிறார்.

"எனக்கு அவரை தெரியாது. அவரது வீடியோக்களை பார்த்தேன். #PositiverMentalHealth தான் முக்கியம். ஆனால் இந்த சம்பவத்தை சுற்றி சில மர்மங்கள் இருக்கிறது. அது பற்றி அதிகாரிகள் முழுமையான விசாரணையா நடத்துவார்கள் என நம்புகிறேன்" என தெரிவித்து இருந்தார்.

"அவரது பெற்றோர் மற்றும் குடும்பம் அனுபவிக்கும் வலியை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. யாராவது கவனித்து இருந்தால் அல்லது யாரிடமாவது அவர் சொல்லி இருந்தால் இதை தவிர்த்து இருக்கலாம்" என மற்றொரு ட்விட்டில் அவர் கூறி இருக்கிறார்.

இன்று மற்றொரு ட்விட்டை பதிவிட்டு இருக்கும் அவர் "VJ சித்ராவின் சில வீடியோக்களை பார்த்துக்கொண்டு இருந்தேன். என் கண்ணீரை அடக்க முடியவில்லை. அப்படி ஒரு பெண். பெரிய இழப்பு இது. அவர் என்ன வலியை அனுபவித்து இருப்பார். அவரது பெற்றோர் எப்படி இதை தாங்கிக்கொள்வார்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

அடுத்த செய்தி