ஆப்நகரம்

சிறையில் சித்திரவதையை அனுபவிக்கும் அனு... மாமியாரின் மாஸ்டர் பிளான்…!

Criminal Justice 2 கடந்த 24-ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியானது. தமிழில் டப் செய்யப்பட்டுள்ள இந்த வெப் சீரீஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் மூன்றாம் எபிசோட் இதோ.

Samayam Tamil 28 Dec 2020, 10:55 pm
அனுசந்திரா தனது கணவரை கத்தியால் குத்திவிட்டு அந்த வழக்கில் 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்காக வக்கீல் மாதவ் வாதாடுகிறார். அனுவின் கணவர் பிரபல வக்கீல் என்பதால் யாரும் இந்த வழக்கில் அனுவுக்கு உதவ முன்வரவில்லை. கர்ப்பமாக இருக்கும் அனு, சிறையில் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்.
Samayam Tamil கிரிமினில் ஜஸ்டீஸ்
கிரிமினில் ஜஸ்டீஸ்


அனுவின் மாமியார் அந்த குழந்தை தனது மகனின் வாரிசு என்பதால் சிறையில் ஆள் பலம் மூலம் அவரை பாதுகாக்க ஏற்பாடு செய்கிறார். அந்த குழந்தை பிறந்த உடனே அனுவிடம் இருந்து பிரித்து எடுத்துச்செல்ல திட்டமிடுகிறார். அனுவின் மகள் ரியா மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் குழந்தைகள் நல அமைப்பின் கட்டுப்பாட்டில் தனது பாட்டி வீட்டில் உள்ளார்.

அனு எதற்காக தனது கணவரை கத்தியால் குத்த வேண்டும் என்பது யாருக்கும் தெரியவில்லை. மகளும் அம்மா மீது தான் கடும் கோபத்தில் உள்ளார். தனது மிகவும் பிடித்த அப்பாவை இப்படி செய்துவிட்டாரே என்று கலங்கியுள்ளார்.

வனஜாவுக்கு பளார்.. ஆதிக்காக கொந்தளித்த அகிலா! செம்பருத்தி சீரியலில் இன்று

மாதவ் பெண் வக்கீல் ஒருவரின் உதவியுடன் அனு வழக்கை விசாரிக்கிறார். எதாவது ஆதாரம் கிடைக்காதா என்று பல முயற்சிகளை எடுக்கிறார். கல்யாணம் ஆன பிறகும் மாதவ் மனைவியுடன் ஒன்றாக வாழ்க்கை நடத்தாமல் தயக்கம் காட்டுகிறார். ஆனால் அவர் மனைவியோ கணவர் மீது அதிக அன்பு வைத்துள்ளார்.

ரியாவிடம் பேசி என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள மாதவ் நினைக்கிறார். அதற்காக குழந்தைகள் நல அமைப்பின் உதவியுடன் பள்ளியில் அவரை சந்திக்கின்றனர். அவர் தனது அம்மா அப்பாவை கத்தியால் குத்தியதாக சொல்கிறார். பிறகு குழந்தைகள் நல அமைப்பினர் போதும் என்று சொல்ல, மாதவ் தனக்கு உதவும் பெண் வக்கீலுடன் அங்கிருந்து வெளியே வருகிறார். அப்போது ரியாவின் தோழி, அவர்களிடம் அனு தான் கத்தியால் குத்தினார் என்று ரியா சொன்னதாக சொல்கிறார்.

வனஜாவுக்கு பளார்.. ஆதிக்காக கொந்தளித்த அகிலா! செம்பருத்தி சீரியலில் இன்று

ஆனால் எதற்காக குத்தினார் என்பது தெரியவில்லை. அதேநேரம் ரியா மீதும் ஒரு சந்தேகம் எழுகிறது. என்ன தான் நடந்தது? யார் பிக்ரமை கத்தியால் குத்தியது? வீட்டில் அன்று இரவு நடந்தது என்ன? இப்படி பல கேள்விகளுடன் இந்த எபிசோட் முடிகிறது. அடுத்த எபிசோட்டில் ஆவது நமது கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?

அடுத்த செய்தி