ஆப்நகரம்

சொந்த வீட்டிலேயே திருட்டு.. தெய்வமகள் சீரியல் நடிகைக்கு போலீஸ் வலைவீச்சு

தனது மாமனாரின் வீட்டில் கணவரை திருட வைத்த தெய்வமகள் சீரியல் நடிகை சுசித்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 16 Sep 2020, 1:50 pm
தெய்வமகள் சீரியலில் நடித்து அதிகம் பாப்புலர் ஆனவர் நடிகை சுசித்ரா. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சீரியலில் நடித்த வாணி போஜன் தற்போது கோலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். தெய்வமகள் சீரியலில் நடித்து இருந்த சின்னத்திரை நடிகை சுசித்ரா தற்போது சொந்த வீட்டிலேயே திருடியதற்காக தேடப்பட்டு வருகிறார்.
Samayam Tamil Robbery


சுசித்ராவின் கணவர் மணிகண்டன் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவர் சினிமா துறையில் பணியாற்றலாம் என்று தான் பண்ருட்டியில் இருந்து சென்னை வந்திருக்கிறார் ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்காததால் டிரைவர் பணி செய்து வந்தாராம்.

அந்த சமயத்தில் தான் அவர் சுசித்ராவை சந்தித்து அவருடன் காதலில் விழுந்து, அதன் பின் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களாம். கொரோனா லாக் டவுன் நேரத்தில் இருவருக்குமே வேலை கிடைக்காததால் வருமானம் இன்றி இருந்துள்ளனர்.

அப்போது சொந்த ஊருக்கு அழைத்து சென்று பெற்றோருக்கு சுசித்ராவை அறிமுகம் செய்திருக்கிறார் மணிகண்டன். அவர்களும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் சுசித்ரா தன் கணவருக்கு ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார். வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை திருட சொல்லி மணிகண்டனை வற்புறுத்தி உள்ளார். அந்த பணத்தை கொண்டு நாம் குறும்படம் எடுத்து பிரபலம் ஆகி விடலாம் என ஆசை வார்த்தைகள் கூறி இருக்கிறார்.

அவர்கள் போட்ட திட்டப்படி சுசித்ரா தனக்கு சென்னையில் வேலை இருக்கிறது என சொல்லி கிளம்பி இருக்கிறார். அதன் பிறகு சில தினங்களில் மணிகண்டன் வீட்டில் அனைவரும் வெளியே சென்ற நேரத்தில் சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துள்ளார்.

பூட்டு உடைத்து நகை, பணம் திருடப்பட்டு இருப்பதை பார்த்த மணிகண்டனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் மகன் தான் திருடி இருப்பது தெரியவந்தது. அதன் பின் மணிகண்டனை சிறையில் அடைத்தனர். அது பற்றி அறிந்து சுசித்ரா தற்போது தலைமறைவாகி விட்டாராம். அவரை தற்போது போலீசார் தேடி வருகிறார்கள்.

அடுத்த செய்தி