ஆப்நகரம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்டா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனது கர்ப்பம் குறித்த மகிழ்ச்சியான செய்தியை கணவரிடம் சொல்ல முடியாமல் தவித்து வந்த தனம் ஒருவழியாக அதை சொல்லிவிடுகிறார்.

Samayam Tamil 10 Dec 2020, 3:25 pm
கணவரின் தம்பிகளை தனது குழந்தைகள் போல நினைத்து வளர்த்து வரும் தனம், தனக்கென குழந்தைகள் வேண்டுமா என்பதை யோசிக்க மறந்துவிட்டார். அதனால் எந்த சுப காரியம் என்றாலும் அவமானப்படும் அவருக்கு குடும்பமே உறுதுணையாக நிற்கிறது. தனம் எப்படியாவது ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கதிர் - முல்லை ஜோடி பல திட்டங்களை போடுகின்றனர். அதற்கு பலனாக தனம் இப்போது கர்ப்பமாகியுள்ளார். பல ஆண்டுகள் கழித்து குழந்தையை சுமக்கும் தனம், அந்த மகிழ்ச்சியை தனது கணவரிடம் சொல்ல நினைக்கும் சமயம் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.
Samayam Tamil Pandian Stores Dhanam


மீனாவின் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மீனாவின் தந்தை அவரை அழைத்துக் கொண்டு சென்றுவிடுகிறார். இதனால் வீடே சோகத்தில் உள்ளது. இந்த சூழலில் தனது கர்ப்பத்தை பற்றி சொல்ல முடியாமல் மனதுக்குள் போராட்டம் நடத்தும் தனம், ஒருவழியாக தனது கணவரிடம் உண்மையை சொல்லிவிடுகிறார்.

இன்று வெளியான பிரமோவில் கோவிலில் தனம் தனது கணவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, கணவர் வேறெதோ பேச, அதற்கு நடுவே இனி நமக்கு அந்த கவலை இல்லை. நீங்கள் அப்பா ஆகப் போகிறீர்கள் என்று சொல்லி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் தனம். இந்த நாளுக்காகத் தான் தனம் காத்திருந்தார்.

சித்ரா மரணம் கொலையா, தற்கொலையா? வெளியான பிரேத பரிசோதனை முதற்கட்ட தகவல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி முல்லை கதாபாத்திரம் இல்லை என்பதால், சீரியலின் போக்கு மாற்றப்படலாம். அதே நேரம் முல்லை கதாபாத்திரத்தில் இனி வேறொரு நபரை நடிக்க வைத்தால் ரசிகர்கள் ஏற்பார்களா? முல்லை நடித்துக் கொடுத்த சீன் வரை ஒளிபரப்பு செய்து விடுவார்கள்.

ஆனால் அதற்குப் பிறகு தான் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. கதிர் - முல்லை ஜோடி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஹாட்ஸ்பாட். முல்லையாக நடித்த சித்ரா தற்கொலை செய்து கொண்டபின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு ஆட்டம் கண்டுள்ளது என்றே சொல்லலாம்.

அடுத்த செய்தி