ஆப்நகரம்

Rachitha Mahalakshmi: ரச்சிதாவுக்கு விரைவில் இரண்டாம் திருமணமா.?: மனம் திறந்த தினேஷ்.!

எனக்கும் ரச்சிதாவுக்கும் இடையேயான பிரிவு தற்காலிகமானது தான் என தெரிவித்துள்ளார் சீரியல் நடிகர் தினேஷ்.

Samayam Tamil 19 Jul 2022, 5:45 pm
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. கடந்த 2011ம் ஆண்டு ஒளிபரப்பாகிய ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிய இவர், இந்த சீரியலில் தனது ஜோடியாக நடித்த தினேஷ் உடன் நிஜத்திலும் ஜோடி ஆனார். தொடர்ந்து இவர் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.
Samayam Tamil Rachitha - Dinesh
Rachitha - Dinesh


சரவணன் மீனாட்சி சீரியலின் முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் மீனாட்சியாக என்ட்ரி ஆனார். தொடர்ந்து சின்னத்திரையில் பல சீரியல்களில் ரச்சிதா நடித்தார். கடைசியாக நடித்து வந்த “நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2” சீரியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் தற்போது கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் “இது சொல்ல மறந்த கதை” எனும் சீரியலில் நடித்து வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நடிகை ரசித்தாவிற்கும் பிரபல சீரியல் நடிகர் தினேஷ் என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதி இடையே ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக, இருவரும் தற்போது தனித்தனி வீட்டில் வாழ்த்து வருகின்றனர். அண்மையில் ரச்சிதா முதன்முறையாக கணவரை பிரிந்து வாழ்வதை பற்றி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் ரச்சிதா இரண்டாம் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

இந்நிலையில் இந்த பிரிவு குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசிய தினேஷ், வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல எங்களது வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த பிரிவு தற்காலிகமானது என நான் நம்புகிறேன். காலம் அனைத்தையும் மாற்றும் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

Jacqueline: வெறித்தனமான வொர்க் அவுட்: வேற லெவலில் மாறிய விஜய் டிவி ஜாக்குலின்.!

ரட்சிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவல் குறித்து கேட்டதற்கு வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்தால் சும்மா விடுவார்களா? அப்படித்தான் ஆளாளுக்கு கண்டபடி எழுதி வருகிறார்கள். இதுவரைக்கும் நானும் சரி ரட்சிதாவும் சரி சட்டரீதியாக பிரிவதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரச்சிதா இரண்டாம் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி