ஆப்நகரம்

என் புருஷனை என்னுடன் சேர்த்து வையுங்க: ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை போலீசில் புகார்

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஷீலா தன் கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கூறி எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 4 Aug 2020, 1:26 pm
நெல்லை மாவட்டத்தில் இருக்கும் வள்ளியூரை சேர்ந்தவர் ஷீலா. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி தொடர்கள் தவிர்த்து உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே, அடுத்த சாட்டை, சசிகுமாரின் நாடோடிகள் 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் ஷீலா.
Samayam Tamil sheeela


ஈரமான ரோஜாவே தொடரில் தேன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷீலா. அவருக்கு திருமணமாகி கணவருடன் மும்பையில் வசித்து வந்தார். அவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றது. ஷீலாவுக்கும், கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தில் முடிந்தது.

விவாகரத்திற்கு பிறகு ஷீலா நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்தார். இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்து இருக்கும் வெல்லாண்டிவலசு கிராமத்தை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவருடன் ஷீலாவுக்கு சமூக வலைதளத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எம்.பி.ஏ. படித்துள்ள சௌந்தரராஜன் கிள்ளியூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சமூக வலைதளத்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் ஷீலா, சௌந்தரராஜன் திருமணத்திற்கு அவர்கள் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பையும் மீறி அவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஷீலா, சௌந்தரராஜன் ஆகியோர் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சௌந்தரராஜனுக்கு வேறு திருமணம் செய்து வைக்க அவர் வீட்டில் ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது. சௌந்தரராஜனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவது குறித்து அறிந்த ஷீலா எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஷீலா தன் புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

என் கணவர் சௌந்தரராஜனுக்கு அவர் வீட்டில் வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார். என் கணவரை தயவு செய்து என்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சௌந்தரராஜனின் அம்மா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தங்கள் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷீலா போலீசாரிடம் கொடுத்தார். ஷீலா புகார் கொடுத்த பிறகு சௌந்தரராஜனை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். உங்கள் பிரச்சனையை நீதிமன்றத்திற்கு சென்று தீர்த்துக் கொள்ளுங்கள் என்று போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

நடிகை ஒருவர் தன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி காவல் நிலையத்திற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிவி நிகழ்ச்சியில் நடிகையின் கண்ணில் காயம்: இளகிய மனமுள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்காதீங்க

அடுத்த செய்தி