ஆப்நகரம்

Sembaruthi Serial: ஒருவழியாக ஆதி - அகிலா சந்திப்பு.. வில்லி வனஜா செய்த அதிர்ச்சி விஷயம்!

செம்பருத்தி சீரியலில் இன்று ஆதி மற்றும் அம்மா அகிலாண்டேஸ்வரி அகியோர் சந்தித்துவிட்டனர்.

Samayam Tamil 3 Jan 2021, 10:09 pm
செம்பருத்தி சீரியலில் நேற்றைய எபிசோடில் பார்வதி உடனான சந்திப்பை ஒரு கோவிலில் வைக்கும்படி கூறுகிறார். அதை கேட்டு ஆதி மற்றும் பார்வதியும் மகிழ்ச்சி அடைகின்றனர். அதே போல குடும்பத்திற்கு உதவி செய்த ஒருவர் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்பதை பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றனர்.
Samayam Tamil Sembaruthi Serial (Pic Credits: Zee5)

அது போல பார்வதி எது கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்பது பற்றி தனது மனசாட்சியுடன் அகிலாண்டேஸ்வரி பெரிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அதன் பின் பார்வதிக்கு கொடுப்பதற்காக ஐஸ்வர்யா சீர்வரிசை தட்டை எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் போது அங்கு திருட்டுத்தனமாக வேறொரு லெட்டர் மற்றும் பிளாங்க் செக்கை புடவையில் ஒளித்து வைத்துவிடுகிறார் வில்லி வனஜா.

சித்தி அங்கிருந்து செல்வதை பார்த்த அருண் அதன் பின் அங்கு சென்று அந்த செக்கை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். அதன் பின் அதை எடுத்து வைத்துவிட்டு அதன் பின் வனஜாவை ரூமிலேயே வைத்து லாக் செய்துவிடுகிறார் அருண்.

ஆதியும் பார்வதியும் அம்மாவை பார்க்க உள்ள பூரிப்பில் கோவிலில் உருக்கமாக வேண்டிக்கொள்கின்றனர். அம்மா அப்போது வருவார் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மறுபுறம் வனஜா தன் அறை கதவை திறந்து பார்த்து திறக்காததால் தட்டி கத்தி கூப்பாடு போடுகிறார். அதன் பின் வேலைக்காரி வந்து திறந்துவிட அவர் வேறு காரை எடுத்து கொண்டு வேகமாக வருகிறார். அதே நேரத்தில் ஆதி மற்றும் பார்வதியை அகிலா மற்றும் குறும்பத்தினர் கோவிலில் சந்தித்துவிடுகின்றனர்.

அம்மா என ஆதி கூப்பிட, 'உன்னை பார்த்து எத்தனை நாளாச்சு. என்னை பார்க்கணும் என பேசணும் என தோன்றவில்லையால். வாசல் வரை வந்துவிட்டு என்னை பார்க்காமல் போனால் என்ன அர்த்தம்' என கண்ணீர் மல்க கேட்கிறார் அகில. அதற்கு ஆதியும் மன்னிப்பு கேட்டார்.

'ஆதிகடவூர் ஆதித்யா யாரிடமும் மன்னிப்பு கேட்க கூடாது. என்னிடம் இருக்கும் ரத்தம் தான் உன்னிடத்திலும் ஓடுகிறது. நீ மன்னிப்பு கேட்க கூடாது' என சொல்லிவிட்டு அவர் பார்வதி பக்கம் திரும்புகிறார்.

பார்வதியை என்ன சொல்ல போகிறார் அகிலா? நாளை தெரியும்.

அடுத்த செய்தி