ஆப்நகரம்

Baakiyalakshmi சொந்த வீட்டிலேயே இருக்க முடியல.. பொய் சொல்லிவிட்டு பெங்களூருக்கு கிளம்பும் கோபி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா மகள் மயூ கண்களில் சிக்காமல் இருப்பதற்காக சொந்த வீட்டுக்குள்ளேய ஓடி ஒளிகிறார். இறுதியில் அவசரமாக பெங்களூர் செல்வதாக கூறிவிட்டு கிளம்புகிறார்.

Samayam Tamil 8 May 2021, 12:59 am
தனக்கு உடம்பு சரியில்லை என ட்ராமா போடும் கோபி படுக்கையில் படுத்தபடி அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.
Samayam Tamil gopi goes on a trip to escape from mayu baakiyalakshmi serial update
Baakiyalakshmi சொந்த வீட்டிலேயே இருக்க முடியல.. பொய் சொல்லிவிட்டு பெங்களூருக்கு கிளம்பும் கோபி


சுடுதண்ணீரில் தெர்மாமீட்டர்

கோபிக்கு ஜுரம் என சொன்னதால் அனைவரும் வரிசையாக வந்து பார்கிறார்கள். எழில் கோபிக்கு எவ்வளவு ஜுரம் இருக்கிறது என பார்க்க அவரது கையில் தர்மாமீட்டர் வைக்கிறார்.

அவர்களை திசைதிருப்பும் கோபி சுடுதண்ணீரில் அதை வைத்து 102 டிகிரி ஜுரம் இருப்பது போல காட்டுகிறார். அதை பார்த்து அவர்களும் அதிர்ச்சி ஆகின்றனர்.

ஹாஸ்பிடல் போகலாம் என எழில் அழைத்தாலும் கோபி சமாளிக்கிறார். மாத்திரை சாப்பிட்டுவிட்டேன், நாளை வரை பார்க்கலாம் என சொல்லி சமாளிக்கிறார்.

போனில் பேசும் ராதிகா

மயூ மற்றும் இனியா இருவரும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஒரே நாளில் அவர்கள் இருவரும் நெருக்கம் ஆகிவிட்டனர். அப்போது ராதிகா போன் செய்கிறார். அவரிடம் பேசும் மயூ தான் இங்கு நலமாக இருப்பதாக செல்கிறார்.

ஆன்டி, அக்கா, அண்ணா, தாத்தா, பாட்டி என அனைவரும் நன்றாக பார்த்துக்கொள்வதாக சொல்கிறார்.

நடிக்கும் கோபி

உடல்நிலை சரியில்லை என சொன்னதால் இன்று உங்களுடன் இருக்கிறேன் என சொல்லி பாக்யா கோபியின் அறையிலேயே இருக்கிறார். அவரை ஏமாற்றுவதற்காக தொடர்ந்து உடல்வலியால் துடிப்பது போல நடிக்கிறார் கோபி.

பாக்யாவும் அதை நம்பி வருத்தப்படுகிறது. இப்படி நடிக்க வேண்டி இருக்கிறதே என சொல்லி நொந்துகொள்கிறார் கோபி.

பெங்களூர் கிளம்பும் கோபி

அதன் பின் இந்த பிரச்சனையில் இருந்து தப்ப சில தினங்களுக்கு வீட்டை விட்டு வெளியில் செல்வது தான் சரி என முடிவெடுத்த கோபி பையை எடுத்துக்கொண்டு தான் பெங்களூர் செல்வதாக கூறுகிறார்.

எழில் சந்தேகமாக அவரை பார்க்க, 'நீயும் கூட வா' என சொல்கிறார் கோபி. மயூவின் குரல் கேட்கவே அவசர அவசரமாக அனைவரிடமும் கூறிவிட்டு கிளம்புகிறார் அவர்.

காரில் புலம்பிக்கொண்டே போகிறார் கோபி. 'ராதிகா வந்தால் தான் ஓடி ஒழிந்தேன். தற்போது மயூ வரும்போதும் ஓட வேண்டி இருக்கிறது. சொந்த வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை என சொல்லி புலம்புகிறார்.

அடுத்த செய்தி