ஆப்நகரம்

மாயனுக்கு பிரச்சனையாக வரும் காயத்ரியின் திருமணம்: நாம் இருவர் நமக்கு இருவர் அப்டேட்

காயத்ரியின் திருமணம் நின்றதற்கு மாயன் தான் காரணம் என சிதம்பரம் மற்றும் அவரது மகன் முத்துராஜ் இருவரும் செய்த வேலையால், வீண்பழி சுமத்தப்பட்டு நிற்கிறார்.

Samayam Tamil 2 Nov 2020, 11:09 am
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். மகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தனக்கு அமைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை மணக்கிறார் மாயன். தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டார் என மாயனை பழிவாங்க காத்திருக்கிறார் மகா.
Samayam Tamil மாயனுக்கு பிரச்சனையாக வரும் காயத்ரியின் திருமணம்: நாம் இருவர் நமக்கு இருவர் அப்டேட்


இவர்கள் கதை ஒரு பக்கம் இருக்க, காயத்ரியின் நிச்சயம் நின்றதற்கு மாயன் தான் காரணம் என வீண் பழி சுமத்தப்படுகிறார். காரணம் என்னவென்று மாப்பிள்ளை வீட்டில் கேட்டால் மாயன் தான் கத்தியை வைத்து மிரட்டி நிச்சயம் நிற்க காரணம் என அவர்களே கூறுகிறார்கள்.

இது சொத்துக்காக சிதம்பரம் மற்றும் அவரது மகன் முத்துராஜ் ஆகியோர் செய்த சதி தான் என மாயன் கண்டுபிடித்துவிடுகிறார். அதே நேரத்தில் சிதம்பரம் நினைத்தபடி முத்துராஜ் உடன் காயத்ரிக்கு நிச்சயம் நடந்துவிடுகிறது. அதனைப் பார்த்து தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார் மாயன்.

மாயனால் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என அவரின் அம்மா நாச்சியார், மகாவிடம் எனக்கு வாக்குக்கொடு என கேட்கிறார். ஆனால் காயத்ரி விரும்புவதோ முதலில் நிச்சயம் நடக்கவிருந்த மாப்பிள்ளை ஆதவனை தான் என மாயனிடம் கூறுகிறார். இதனை கேட்டவுடன் மாயன், காயத்ரிக்கு ஆதவனுடனே திருமணம் செய்து வைப்பேன் என வாக்களிக்கிறார்.

மாயன் காயத்ரியின் திருமணத்தை நிறுத்த, மாப்பிள்ளை முத்துராஜ் உடன் எப்போதும் கூடவே இருக்கும் அடியாளை பிடித்துவிடுகிறார். அந்த நபரோ அவருக்குத் தெரிந்த உண்மைகளை மாயனிடம் கூறிவிட்டு, திருமணத்தை நிறுத்துவதற்கு நான் எந்த உதவி வேண்டுமென்றாலும் செய்கிறேன் என கூறுகிறார்.

இந்த திருமணம் நடக்குமா, நடக்காதா என்று இருக்க, வண்டியில் டீசல் இல்லாமல் நின்று கொண்டிருக்கிறார் மாயன். அப்போது வரும் மாயனின் மாமனார் ரத்தினவேலோ, மகாவை கரெக்ட் பண்ண வேலைக்குச் செல்லும்படி பிளான் போட்டுத் தருகிறார்.

திருமணத்தை நிறுத்தி விடுவாரா மாயன்? காயத்ரிக்கு தான் விரும்பிய மாப்பிள்ளை கிடைப்பாரா? உண்மை தெரிந்தவுடன் மகாவிற்கு மாயனை பிடிக்குமா? என பல விறுவிறுப்பான எபிசோடுகள் நிறைந்திருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் காணலாம்.

தேன்மொழிக்காக ரவுடிகளுடன் சண்டை போட்ட அருள்

அடுத்த செய்தி