ஆப்நகரம்

10 நாட்களில் பெற்றோரை இழந்த நடிகரின் வீட்டில் குட் நியூஸ்

10 நாட்களில் அப்பா, அம்மாவை இழந்த கௌரவ் சோப்ரா வீட்டில் புதுவரவால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Sep 2020, 6:50 pm
இந்தி படங்களில் நடித்துள்ள கௌரவ் சோப்ரா தற்போது இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் பெங்களூரை சேர்ந்த ஹிதிஷா செராண்டாவை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி டெல்லியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
Samayam Tamil gaurav chopra


முதல்முறையாக கர்ப்பமாக இருந்த ஹிதிஷா நேற்று முன்தினம் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கௌரவ் சோப்ராவின் தந்தையும், தாயும் 10 நாட்கள் இடைவெளியில் மரணம் அடைந்தார்கள். இந்நிலையில் குழந்தை பிறந்திருப்பது கௌரவ் சோப்ராவுக்கு ஆறுதலான விஷயம் ஆகும். அவருக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்த ரசிகர்கள் தான் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அம்மாவை தொடர்ந்து அப்பாவும் போய்விட்டார் என்று வேதனைப்பட்டீர்களே, தற்போது அவரே உங்களுக்கு மகனாக வந்து பிறந்திருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

19ம் தேதி அம்மா, 29ம் தேதி அப்பா மரணம்: 10 நாளில் 2 பேரை பறிகொடுத்த நடிகர்

கௌரவ் சோப்ராவின் அம்மா கடந்த மாதம் 19ம் தேதி மரணம் அடைந்தார். அவரின் அப்பா கடந்த மாதம் 29ம் தேதி உயிரிழந்தார். தற்போது மகன் 14ம் தேதி பிறந்திருக்கிறார். இந்த குறுகிய காலத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தை விளங்கிக் கொண்டுள்ளதாக கௌரவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

கௌரவ் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச விரும்பாதவர். கௌரவ் ஹிதிஷாவை காதலித்தபோதிலும் திருமணத்திற்கு முன்பு அவரின் ஒரு புகைப்படத்தை கூட சமூக வலைதளங்களில் வெளியிட்டது இல்லை. தேனிலவுக்கு சென்றபோது தான் மனைவியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்தார்.

அதன் பிறகு மனைவியின் புகைப்படத்தை வெளியிடவே இல்லை. அதனால் கௌரவ் தன் மகனின் புகைப்படத்தை வெளியிடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

10 நாட்களில் அம்மா, அப்பாவை இழந்து வாடிய கௌரவை பார்த்து சின்னத்திரையை சேர்ந்தவர்கள் கவலைப்பட்டார்கள். தற்போது குழந்தையின் வரவால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக தன் பெற்றோரின் மரணம் குறித்து கௌரவ் கூறியதாவது,

ஸ்ரீ ஸ்வதந்திர சோப்ரா என் ஹீரோ. என் இன்ஸ்பிரேஷன். அவர் அளவுக்கு நான் வருவேனா என்பது சந்தேகம் தான். சிறந்த மனிதர், சிறந்த மகன், சிறந்த சகோதரர், எப்பொழுதும் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர். சிறந்த தந்தை.. அனைத்து அப்பாக்களும் என் அப்பா மாதிரி ஸ்பெஷல் இல்லை என்பதை புரிந்து கொள்ள எனக்கு 25 ஆண்டுகள் ஆனது.

நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். நான் சிறு வயதில் தெருவில் நடந்து சென்றாலோ, மார்க்கெட்டுக்கு சென்றாலோ என்னை பார்ப்பவர்கள் சோப்ரா சாபின் மகன் என்பார்கள். கடைக்காரர் என்னிடம் குறைவாகவே பணம் வாங்குவார். எங்கள் வீட்டை தேடியவருக்கு அடையாளம் காட்ட யாராவது துணைக்கு வந்து கேட்டில் நிற்பதை அடிக்கடி பார்க்க முடியும். சோப்ரா சாப் வீடு என்று கூறினால் போதும் யாராக இருந்தாலும் அழைத்து வந்து எங்கள் வீட்டில் விடுவார்கள்.

என் அம்மா கடந்த நான்கு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார். அந்த நான்கு ஆண்டும் அப்பா அவரை அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொண்டார். அம்மாவுடன் இருக்க எங்களை விட்டுச் சென்றுவிட்டார். அம்மா கடந்த 19ம் தேதி மரணம் அடைந்தார். அப்பா 29ம் தேதி உயிர் இழந்தார். 10 நாட்கள்...இருவரும் சென்றுவிட்டார்கள். அவர்களின் இழப்பால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் என்றுமே அப்படியே இருக்கும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி