ஆப்நகரம்

உடை சின்னதா இருக்கு.. விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட மாடல்! அவர் அணிந்த உடை இது தான்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாடல் ஒருவர் மிகவும் சிறிய உடை அணிந்து வந்ததற்காக விமானத்தில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கிறார்.

Samayam Tamil 5 Feb 2021, 10:37 am
மிகவும் சிறிய உடை அணிந்து வந்திருக்கிறார் என காரணம் காட்டி பிரபல மாடல் ஒருவரை ஆஸ்திரேலிய விமான நிறுவன ஊழியர் விமானத்தில் இருந்து இறக்கி விட்டிருக்கிறார்.
Samayam Tamil instagram model isabelle eleanore sent out of flight for small dress
உடை சின்னதா இருக்கு.. விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட மாடல்! அவர் அணிந்த உடை இது தான்


மாடல்

பொதுவாகவே மாடலிங் துறையில் இருப்பவர்கள் எப்போதும் அதிகம் ட்ரெண்டியான உடைகளை அணிவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். வெளியில் வரும் போது அனைவரையும் கவரும் வகையில் தான் உடைகள் இருக்கும்.

சில சமயங்களில் கவர்ச்சி அதிகம் காட்டும் வகையிலான உடைகளில் பொது இடங்களுக்கு அவர்கள் வருவதும் சாதாரணமான ஒன்று தான்.

அப்படி மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து விமானத்தில் செல்ல வந்த மாடல் ஒருவரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்து விமான பணிப்பெண் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

தடுத்து நிறுத்தப்பட்ட மாடல் இசபெல் எலியனோர் (Isabelle Eleanore)

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாடல் இசபெல் எலியனோர் (Isabelle Eleanore) தான் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். பிரபல இன்ஸ்டாகிராம் மாடலான அவர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் நிறுவனத்தின் விமானத்தில் பயணிக்க வந்த போது கிழிந்த ஜீன்ஸ் மற்றும் மிகவும் சிறிய crop டாப் அணிந்து வந்திருக்கிறார்.

அது மிகவும் சிறியதாக இருக்கிறது எனவும் ஜாக்கெட் அணிந்து வரும்படியும் விமான பணிப்பெண் கூறி இருக்கிறார். Isabelle Eleanore இதனால் கடும் கோபமாகி அவருடன் சண்டை போடு இருக்கிறார்.

அதன் பின் இன்ஸ்டாகிராமில் தான் அணிந்து வந்த உடையில் புகைப்படத்தை பதிவிட்டு, "இந்த உடையால் தான் என்னை விமானத்தில் இருந்து வெளியில் அனுப்பிவிட்டார்கள்" என குறிப்பிட்டு ஒரு நீண்ட பதிவை போட்டிருக்கிறார்.

அவர் அணிந்து வந்த உடை இதுதான்..

View this post on Instagram A post shared by ISABELLE (@isabelle.eleanore)

மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம்

Isabelle Eleanore பற்றிய பிரச்சனை பெரிதான நிலையில், விமான நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கோரி இருக்கிறது. இது பற்றி அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பேசும்போது...

"நாங்கள் இசபெல்லை தொடர்பு கொண்டு இந்த சம்பவத்திற்காகவும் அதை குழுவினர் கையாண்ட விதத்திற்காகவும் மன்னிப்பு கேட்டுக் கொண்டோம்."

"நிறுவனத்தின் பாலிசி பற்றிய விதிமுறைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருக்கின்றன. அது பற்றி குழுவினருக்கு மீண்டும் அறிவுறுத்தி உள்ளோம். உடை பற்றி சில கட்டுப்பாடுகளைக் இருக்கின்றன. ஷூ போன்றவை பற்றி தான் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் crop டாப் பற்றி அப்படி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை" என கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி