ஆப்நகரம்

பாண்டியன் ஸ்டோர்ஸில் பிரச்சனையோ, பிரச்சனை

தம்பிகளுக்காக குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையை ஒதுக்கி வைத்து விடுகின்றனர் தனம், மூர்த்தி தம்பதியர். அதனால் கோபம் அடைந்த தனத்தின் அம்மா, நமக்கு இடையே இருந்த உறவு முறிந்து விட்டது என்று கூறி செல்கிறார்.

Samayam Tamil 26 Oct 2020, 11:44 am
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பத்தில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. தனம் மற்றும் மூர்த்திக்கு குழந்தை இல்லாததற்கு காரணம், அவர்களது தம்பிகள் தான் என தெரிந்ததும் மிகவும் மன வருத்ததிற்கு ஆளாகிறார்கள் பெற்றோர்கள்.
Samayam Tamil pandian stores


தனது மகளுக்கு குழந்தை பிறக்காமல் போனதற்கு மூர்த்தி தான் காரணம் என தெரிந்ததும் மிகவும் கோபமடைந்த தனலட்சுமியின் அம்மா பார்வதி, காட்டமாக பேசி குடும்பத்தில் உள்ள அனைவரையும் மன வருத்ததிற்கு ஆளாக்குகிறார்.

மூர்த்தியும் தான் செய்தது தவறு என குடித்துவிட்டு தினமும் வருத்தத்துடன் புலம்பி வருகிறார். மூர்த்தியின் தாய் லட்சுமியும் மகன், மருமகளுடன் பேசுவதில்லை, அவர்களை வெறுக்கிறார்.

தனமோ முல்லையிடம், மாமியார் லட்சுமி பேசியதை வருதத்தோடு கூறி ஆதங்கப்படுகிறார். தனம், லட்சுமிக்கு உதவி செய்ய வருகிறார், ஆனால் லட்சுமி அவரை துரத்துகிறார். தனத்தை குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என மீண்டும் அந்த பேச்சை எடுக்க கோபம் அடைந்த அவர், இது என் வாழ்க்கை, எனக்கு பிடித்து தான் நான் இதற்கு ஒத்துக் கொண்டேன் என கூறுகிறார்.

மூர்த்தி வீட்டில் பிரச்சனை முடிந்தது என்று சந்தோஷப்பட மீனாவின் தந்தையோ தனம், மூர்த்திக்கு நடந்ததை அறிந்து அதனை நம்பாமல் இருவரையும் அவதூறாகப் பேசுகிறார்.

குடும்ப பிரச்சனைகள், கலவரத்திற்கு இடையே கதிர், முல்லையின் காதல் குறையவில்லை. முல்லைக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து தருகிறார் கதிர். ரண களத்திலும் கிளுகிளுப்பா என்று கேட்கும் அளவிற்கு ஓவராகவே இருந்தது.

கதிரின் நண்பர் மகேஷ் திருட்டுக் கல்யாணம் செய்த பின்னர் அவரின் மனைவியை பார்த்துக் கொள்ளும் படி கதிரிடம் கேட்க அதனை மறுத்துவிடுகிறார். வீட்டில் உள்ள பிரச்சனையே தீராமல் இருக்க இது எதற்கு என மறுத்துவிடுகிறார்.

மூர்த்தி குடும்பத்தில் குழந்தை பிரச்சனை ஓய்ந்ததாக தெரியவில்லை. தனத்தின் அம்மா மூலம் மீண்டும் சிக்கல் வருகிறது. எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறார் என்று தனத்தைப் பார்த்து கேட்கிறார். அதில் கோபப்படும் தனம் இது என வாழ்க்கை நான் எடுத்த முடிவு, யாருக்கும் கேட்க உரிமையில்லை என வெடிக்கிறார்.

உனது வாழ்க்கையில் குழந்தையை பற்றி யோசிக்கவில்லை என்றால் எங்களை மறந்து விடு, பிறந்த வீட்டை மறந்துவிடு என்று தனத்தின் அம்மா கூற, அதற்கு அவரோ, என் முடிவில் மாற்றம் இல்லை என்கிறார். அதை கேட்டு பார்வதி கோபத்தோடு கிளம்பிச் செல்கிறார்.

தனம், மூர்த்திக்கு குழந்தை பிறக்குமா? இருவரும் மனம் மாறுவார்களா? பிறந்த வீட்டுடன் தனத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை தீருமா என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அடுத்து வரும் எபிசோடுகளை பார்க்கலாம்.

மாயனை பழி வாங்க வேண்டும் என துடிக்கும் மகாலட்சுமி.. நாம் இருவர் நமக்கு இருவர் அப்டேட்

அடுத்த செய்தி