ஆப்நகரம்

காதல் படத்தில் நடித்த காலத்தில் இருந்தே எனக்கு இதே பிரச்சனை தான்: சந்தியா

காதல் படத்தில் நடித்த போதில் இருந்தே செட்டில் நுழைந்தால் தனக்கு பதட்டமாகிவிடும் என்று சந்தியா தெரிவித்துள்ளார். ஆனால் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் என்று சொல்லிவிட்டால் பதட்டம் எல்லாம் ஓடிப் போய்விடும் என்கிறார் சந்தியா.

Samayam Tamil 3 Sep 2020, 10:13 am
காதல் படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் சந்தியா. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு நான்கு வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து சந்தியா மீண்டும் நடிக்க வந்துள்ளார். இம்முறை அவர் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். கண்மணி தொலைக்காட்சி தொடரில் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
Samayam Tamil sandhya


இது குறித்து சந்தியா கூறியதாவது,

நான் கம்பேக் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் எனக்கு நடிக்க ரொம்ப பிடிக்கும். எனக்கு திருமணமான உடனேயே கர்ப்பம் ஆனேன். தாயான பிறகு பிசியாகிவிட்டேன். அது திட்டமிடப்படாத கர்ப்பம். எனக்கு நிறைய உதவி கிடைத்தாலும் கஷ்டமான பயணம் அது. என் மகளுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்கிறேன்.

என் மகளுக்கு நான்கு வயதாகிறது. தற்போது நான் எனக்கு பிடித்ததை செய்ய நேரம் இருக்கிறது. நானும், தயாரிப்பாளர் சுஜாதா மேடமும் பல ஆண்டுகளாக டச்சில் இருக்கிறோம். அவர் தான் நான் கண்மணி தொடரில் கவுரவத் தோற்றத்தில் வர வேண்டும் என்றார். எனக்கும் மீண்டும் நடிப்பது எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் போன்று தோன்றியது. அப்படித் தான் நான் கண்மணி தொடரில் நடித்தேன்.

நான் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். ஆனால் நான் மகளுடன் இருக்க வேண்டியிருப்பதால் தொலைக்காட்சி தொடர்கள் வசதியாக இருக்கும் என்று உணர்கிறேன். இருப்பினும் பிற வாய்ப்புகளை ஏற்க மாட்டேன் என்று சொல்ல விரும்பவில்லை.

மேக்கப் போட்டுக் கொண்டு மாஸ்க் அணிவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பயங்கரமாக வியர்க்கும், மேக்கப் எல்லாம் போய்விடும். ஆனால் பாதுகாப்பு தானே முக்கியம். மொத்த குழுவும் விதிமுறைகளை பின்பற்றியது. கேரவனை சானிடைஸ் செய்து கொடுத்தார்கள். நான் செட்டில் நுழைந்ததுமே எனக்கு கை, கால் ஓடவில்லை. காதல் படத்தில் நடித்ததில் இருந்தே செட்டுக்கு சென்றால் பதட்டமாகிவிடும். ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் என்று கூறுவதை கேட்டதும் சரியாகிவிடுவேன். அதன் பிறகு பதட்டம் இருக்காது.

லாக்டவுனில் என் மகளை நினைத்து பதட்டமாக இருக்கிறது. என் குடும்பத்தார், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மிகவும் உதவியாக இருக்கிறார்கள். லாக்டவுனில் மூன்று மாதங்கள் என் குடும்பமும், என் கணவர் குடும்பமும் கூவத்தூரில் இருக்கும் பீச் ஹவுஸில் தங்கியிருந்தோம். தினமும் மாலை வாக்கிங் செல்வோம். அது தான் என் சிறந்த அனுபவம் என்றார்.

காதலித்து திருமணம் செய்த நடிகையை பிரிந்த பிக் பாஸ் 4 போட்டியாளர்

அடுத்த செய்தி