ஆப்நகரம்

கார் விபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை பலி!

பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை ஷோபா நேற்று இரவு ஏற்பட்ட கார் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Jul 2019, 4:07 pm
கன்னட தொலைக்காட்சி தொடர் மகலு ஜானகி. இதில், மங்களகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஷோபா (45). நேற்று குடும்பத்தோடு, பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பானாசங்கரி கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சித்ரதுர்கா அருகில் கார் சென்று கொண்டிருந்த போது காரின் டயர் திடீரென்று வெடித்தது. வெடித்த வேகத்தில், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
Samayam Tamil actress 2


இந்த விபத்தில், ஷோபா மற்றும் காரில் பயணம் செய்த அவரது குடும்பத்தினர் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 3 பேர் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர், நடித்துக்கொண்டிருந்த சீரியல் இயக்குனர் டிஎன் சீதாராம் கூறுகையில், ஷோபா எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார். மிகவும் திறமையானவர். அவர் மறைந்துவிட்டார் எனும் போது அதிர்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி