ஆப்நகரம்

ஐஸ்வர்யாவால் கடனாளியாகும் கண்ணன்: அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு வந்ததில் இருந்து கண்ணனை வரவுக்கு மீறி செலவு செய்ய வைக்கிறாள் ஐஸ்வர்யா. இதனால் கிரெடிட் கார்டு பில் கூட கட்ட முடியாமல் அவதிப்படுகிறான் கண்ணன். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கதிரிடமும் அவனை கடன் வாங்க சொல்கிறாள். இதனால் மூர்த்தி அண்ணன் அவளை திட்டி தீர்க்கிறான். இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் ஐஸ்வர்யா தன்னுடைய வளைகாப்பை வட்டிக்கு கடன் வாங்கி பிரம்மாண்டமாக நடத்த பிளான் போடுகிறாள்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 18 May 2023, 11:30 am
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு வந்துவிட்டதால் தன்னுடைய வளைகாப்பை நம்மளே நடத்தலாம் என்கிறாள் ஐஸ்வர்யா. இந்த வளைகாப்பு பங்க்ஷனை கிராண்டாக நடத்தி யூடிப்ல வீடியோ போட்டா பிரபலம் ஆகிடலாம் என்கிறாள். ஆனால் கண்ணன் ஏற்கனவே கடன் வாங்கி செலவு செய்து கொண்டிருப்பதால் வளைகாப்பை நடத்த பணமில்லை என்கிறான். ஐஸ்வர்யா லைட்டாக பணம் கேட்டு கஸ்தூரியிடம் பேச்சை போடுகிறாள்.
Samayam Tamil பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ்


பணம் என்றவுடன் தலைதெறிக்க ஓட பார்க்கும் சித்தியிடம் இந்த வளைகாப்பு வீடியோவை நம்ம யூடிப் சேனல்ல போட்டா நெறைய பணம் வரும். நீ பணம் கொடுக்க வேணாம். யார்க்கிட்டயாவது கடன் வாங்கி கொடு என்கிறாள். கஸ்தூரியும் அவள் பேச்சை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக சொல்கிறாள். அவர்கள் பேசுவதை பரிதாபமாக பார்த்து கொண்டிருக்கும் கண்ணன், இவ நம்மளை நடு தெருவுல நிறுத்தாம விட மாட்டா என மனதிற்குள் யோசிக்கிறான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்பக்கம் இரவில் தனம் தூங்கும் போது நெஞ்சு வலியால் அவதிப்படுகிறாள். முல்லை அவளை பார்த்து என்ன ஏது என்று கேட்க, தெரியலை முல்லை. அம்மாக்கிட்ட கேட்டேன். மாசமா இருக்கும் போது, இந்த மாதிரி நெஞ்சுவலி வர்றது சகஜம் தான்னு சொன்னங்க என்கிறாள். ஆனாலும் நெஞ்சுவலியால் தனத்தால் தூங்கவே முடியவில்லை. மறுநாள் முல்லையும், தனமும் வீட்டில் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கும் போது கண்ணனும் ஐஸ்வர்யாவும் வருகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்: கோபியை வச்சு செய்த ராதிகா: பாக்யா கொடுத்த தரமான பதிலடி.!

என்ன ரொம்ப சந்தோஷமா சிரிச்சு பேசிட்டு இருந்தீங்க. வீட்டை விட்டு போன கண்ணனும், ஐஸ்வர்யாவும் மறுபடியும் வந்துட்டாங்கன்னு பயப்படுறீங்களே என வந்ததும் வாயடிக்க ஆரம்பிக்கிறாள் ஐஸ்வர்யா. அதன்பின்னர் வளைகாப்பு விஷயம் பற்றி பேச, அடுத்த மாசம் உனக்கு வளைகாப்பு நடத்த நானும், மாமாவும் பேசிட்டு இருந்தோம் என்கிறாள். உடனே ஐஸ்வர்யா சும்மா சொல்லாதீங்க அக்கா. எங்களுக்கு ஏன் நீங்க வளைகாப்பு நடத்தனும். நாங்களே நடத்திக்கிறோம் என்கிறாள்.

ஷாக்கான தனம்

வளைகாப்பு நடத்த இருக்கும் மண்டபத்தை பற்றி சொல்ல முல்லையும், தனமும் ஷாக்காகின்றனர். குன்னக்குடியிலே பெரிய மண்டபம். ஐந்தாயிரம் பேர் வந்ததா அங்க வளைகாப்பு நடத்துவாங்க என முல்லை கேட்க, அங்கதான் பண்ண போறோம். பணம் எல்லாம் கொடுத்துட்டோம் என ஐஸ்வர்யா சொல்கிறாள். அதன்பின்னர் கண்ணனை அழைத்துக்கொண்டு ஜீவா வீட்டுக்கு கிளம்புகின்றனர்.

கடுப்பான மூர்த்தி

இதனிடையில் மூர்த்தி வீட்டுக்கு வர்ற அவனிடம் கண்ணன், ஐஸ்வர்யா வந்துவிட்டு போன விஷயத்தையும் வளைகாப்பை பெரிய மண்டபத்தில் வைத்து நடத்துவதை பற்றியும் சொல்கிறாள் தனம். இதனைக்கேட்டு கடுப்பாகும் மூர்த்தி, நல்லா வாழக்கூடாததுக்கு என்னலாம் பண்ணனுமோ. அதெல்லாம் பண்றாங்க. அவுங்களை பற்றி பேசவே பேசாத என்கிறான்.

அசிங்கப்படுத்திய ஜனார்த்தன்

இந்தப்பக்கம் ஜீவா வீட்டுக்கு வந்து வளைகாப்பு பற்றி சொல்ல ஜனார்த்தன் பணமெல்லாம் வைச்சு இருக்கியா என நக்கலாக பேச ஆரம்பிக்கிறான். கலையும் வாயை வைத்து சும்மா இருக்காமல் வளைகாப்பு முடிஞ்ச பிறகு ஐஸ்வர்யா எங்க போவா? அவ சித்தி வீட்டுக்கு போவாளா எனக்கேட்டு புண்படுத்துகிறாள். தனம், முல்லையிடம் மட்டும் வாயடிக்கும் ஐஸ்வர்யா இங்கே அமைதியாய் உட்கார்ந்திருக்கிறாள்.

பாக்கியலட்சுமி சீரியல்: கையும் களவுமாக சிக்கிய கோபி: வெளுத்து வாங்கிய ராதிகா.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி