ஆப்நகரம்

சசிகலாவை கொரோனாவுடன் ஒப்பிட்ட பிக்பாஸ் நடிகை

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் சசிகலா ரீஎன்ட்ரி பற்றி விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

Samayam Tamil 8 Feb 2021, 11:24 pm
நான்கு வருட சிறை தண்டனைக்கு பிறகு ரிலீஸ் ஆகி இன்று தமிழகம் திரும்பி இருக்கிறார் சசிகலா. அதனால் தற்போது தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.
Samayam Tamil Sasikala


சசிகலா அதிமுக கொடி இருந்த காரில் பயணித்தார் என காலையில் இருந்து பெரும் பரபரப்பாக இருந்தது. அவர் சென்னை வருவதால் பல வித முன்னெச்சரிக்கை விஷயங்களை அதிமுக செய்திருந்தது. அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்லக்கூடாது என்பதற்காக நினைவிடம் பணிகள் நடப்பதாகக் கூறி மூடப்பட்டது. அது மட்டுமின்றி போலீஸ் எச்சரிக்கை, பிரச்சார கூட்டங்கள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நடைபெற்று இருக்கின்றன.

இதை விமர்சிக்கும் வகையில் தற்போது நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அவர் பிக் பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர். சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி அதிரடியாக கருத்துக்களை கூறி வருபவர்.

சசிகலா ரீஎன்ட்ரி பற்றி கஸ்தூரி ட்விட்டரில் கூறி இருப்பதாவது..

"நினைவிடத்தை மூடிட்டாங்க, அலுவலகத்தை மூடிட்டாங்க, பிரச்சார கூட்டம் ரத்து, சாலைகளை மூடறாங்க, டிவி கூட நிறுத்திட்டாங்களாம். ஹூம். COVID க்கு நிறுத்தவேண்டியதெல்லாம் சசிகலாவுக்கு வுக்கு செய்யுறாங்க. பேசாம சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும்!" என அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி