ஆப்நகரம்

முல்லை பிறந்தநாளுக்கு வாழ்த்திய கதிர்…! கண்கலங்க வைக்கும் இன்றைய எபிசோட்...!

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் நடக்க உள்ள நிகழ்வுகளை இங்கே விரிவாக காணலாம்.

Samayam Tamil 19 Dec 2020, 10:25 am
தனம் 15 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருப்பதால் அவரது கணவர் மூர்த்தி விழுந்து விழுந்து கவனிக்கிறார். தனம் நேற்றைய எபிசோட்டில் வாந்தி எடுத்து பின்பு மீண்டும் பசிப்பதாக சொல்கிறார். உடனே மூர்த்தி சமையலறைக்கு சென்று அங்கு என்ன செய்வது என்று பார்க்கிறார். உடனே கண்ணில் முட்டை தென்பட, ஆம்லெட் போட்டுக் கொடுக்க தயாராகிறார். ஆனால் தனம் வேண்டாம் என்று மறுக்க, அதை கேட்காமல் முட்டை ஆம்லெட் செய்ய தயாராகிறார். வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் கட் செய்கிறார். தனம் கணவனை ஆச்சர்யமாக பார்க்கிறார். பின்பு ஆம்லெட் சமைத்து பின் மனைவிக்கு கொடுக்க, அவர் அதை ஆசையாய் சாப்பிடுகிறார்.
Samayam Tamil Mullai Birthday


அடுத்ததாக முல்லை-கதிர் அறையை காட்டுகிறார்கள். அங்கு முல்லை முழித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அதைக் கண்ட கதிர் என்ன என்று கேட்க, நான் தண்ணீர் குடிக்க சமையலறைக்கு சென்றேன் என்று இழுக்கிறார். அதனால் என்ன ஒழுங்கா படு என்று கதிர் சொல்ல, அவர் சமையலறையில் கண்டதை விவரிக்கிறார். தனம் அக்காவுக்கு மாமா ஆம்லெட் போட்டு கொடுத்ததாக சொல்கிறார். 12 மணிக்கு இரவில் ஆம்லெட் போட்டு கொடுக்கிறார் என்று மீண்டும் சொல்ல, உடனே கதிர் உனக்கும் ஆம்லெட் வேண்டுமா என்று கேட்க மனதுக்குள் ஆமா என்று சொல்கிறார் முல்லை. அடுத்த நாள் விடிந்ததும், வீட்டில் உள்ளவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

தாலியை கழற்றிய பார்வதி, விபத்தில் சிக்கிய ஆதி! ஜீவ சமாதி பூஜையை தடுத்து நிறுத்தினாரா?

அப்போது தனம் லேட்டாக எழுந்துவிட்டதாக சொல்கிறார். அதற்கு மூர்த்தி, நீ இரவு முழுவதும் ஒழுங்காக தூங்கவில்லை என்பதால் காலை அசந்து தூங்கிக் கொண்டிருந்த. அதனால் உன்னை எழுப்பவில்லை என்று பதிலளிக்கிறார். இப்படியாக சில காட்சிகள் நகர்கிறது. காலை குளித்துவிட்டு தனது அறைக்கு வந்த முல்லை, கட்டில் மேல், “எனக்காக பிறந்தவளே பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று ஒரு பேப்பரில் டிசைன் செய்யப்பட்டிருப்பதை பார்த்து நெகிழ்கிறார். ஆம், முல்லையின் பிறந்தநாள் இன்று.

அதோடு முல்லைக்கு புடவை ஒன்றையும் பரிசளிக்கிறார் கதிர். தனது கணவரா இப்படி செய்தார் என்று ஆச்சர்யத்தில் அவரிடமே கேட்க, அவரும் ஆமாம் என்று சொல்கிறார். ஆனாலும் விடாமல் கணவரை அடுத்தடுத்து கேள்வி கேட்க, இதற்கு பேசாமல் நான் உன் பிறந்த நாளை மறந்திருக்கலாம், இப்படி கேள்விகளை கேட்கிறாரே என்று செல்லமாக கடுப்பகிறார் கதிர். கோவிலுக்கு போகலாமா என்று முல்லை கேட்க, ஓகே சொல்கிறார் கதிர். அப்படியே முல்லையிடம், நீ இப்படியே பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

வெண்பாவிக்கு கெட்ட நேரம் ஆரம்பம்! பின்ன செஞ்ச பாவம் சும்மா விடுமா?

இரண்டு பேரும் கோவிலில் நடந்து செல்ல, கதிர் முல்லையின் கையை ஆசையோடு பிடிக்கிறார். அப்படியே இவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நடக்கின்றனர். முல்லையின் பிறந்தநாள் சீனில், நீ பல ஆண்டுகள் இப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கதிர் சொல்ல, நமக்கு கண்கள் கலங்குகிறது. முல்லையாக நடித்து வந்த சித்ரா கடந்த 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டது தான் அந்த கண்ணீருக்கு காரணம்.

அடுத்த செய்தி