ஆப்நகரம்

Kayal Serial: கல்யாணத்தை நிறுத்த பெரியப்பா போடும் திட்டம்.... செம ஷாக்கில் கயல் குடும்பம்

கயல் குடும்பத்தினருக்கு பெரிய அளவில் செலவில் இழுத்து விடுகிறார் பெரியப்பா.

Samayam Tamil 11 Jan 2022, 4:50 pm
சிக்கனமாக கல்யாண நிச்சயத்தை நடத்த வேண்டும் என்று நினைக்கிறாள் கயல். பெரியப்பாவோ கூடுதல் செலவை இழுத்து விடுகிறார். இதனால் குடும்பமே அதிர்ச்சியடைகிறது.
Samayam Tamil கயல் சீரியல்
கயல் சீரியல்


தடைகளைத் தாண்டி தேவிக்கு திருமண நிச்சய வேலைகள் படுஜோராக நடந்து வருகிறது. எல்லோரும் குடும்பத்தோடு சென்று நிச்சயத்திற்கு புடவை எடுக்கிறார்கள். கயல் வீட்டில் நல்லது நடந்தாலே அது பெரியப்பாவுக்கு பொறுக்காது எப்படியாவது கெடுத்து குட்டிச்சுவர் ஆக்க வேண்டும் என்று திட்டம் போடுவார் பெரியப்பா.

அப்படித்தான் கயல் தங்கை தேவிக்கு வசதியான வீட்டில் மாப்பிள்ளை பார்த்தது கொஞ்சம் கூட பொறுக்கவில்லை. ஏதாவது கலவரம் மூட்டி விட்டு திருமணத்தை நிறுத்த முடியுமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். கயலை தனது காலில் விழ வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்.

நிச்சய புடவை எடுக்க வந்த இடத்திலும் மாப்பிள்ளை வீட்டார்களிடம் முகம் கொடுத்து பேசாமல் தூக்கி வைத்துக்கொண்டிருக்கிறார்கள் பெரியம்மாவும் பெரியப்பாவும். அதிக விலை செலவு செய்து தேவிக்கு புடவை எடுப்பது கொஞ்சம் கூட பொறுக்கவில்லை எப்படியாவது இதை தடுக்க வேண்டுமே அதற்காக திட்டம் போட்டு காய் நகர்த்துகிறார்.

பாரதி கொடுத்த ஷாக்.. அதிர்ச்சியில் கண்ணம்மா: பாரதி கண்ணம்மாவில் இன்று!

பொண்ணுக்கு நிச்சயதார்த்த புடவை 20 ஆயிரம் ரூபாய்க்கு எடுத்தால், மாப்பிள்ளைக்கு நிச்சயத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு கோட் சூட் எடுக்க வேண்டுமே என்று குத்தலாக கேட்க, கயலும் அவளது அம்மாவும் அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள். ஏற்கனவே நிச்சயத்திற்கு மிகப்பெரிய கல்யாண மண்டபம் பார்க்க வைத்து செலவை இழுத்து விட நினைத்தார் பெரியப்பா, அதை நாசூக்காக தவிர்த்து விட்டனர். இப்போது மாப்பிள்ளைக்கு டிரஸ் வாங்குவதில் செலவை இழுத்து விட பார்க்கிறார். இதை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற யோசனைதான் கயல் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது

ஒருவழியாக புடவையை எடுத்துக்கொண்டு கல்யாண விசயமாக பேசலாம் என்று பெரியப்பா வீட்டிற்குப் போனால், அங்கே அவரோ, என்னம்மா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாங்களா என்று நக்கலாக கேட்கிறார்.

என்னா ஒரு கெட்ட எண்ணம். அவரது எண்ணம் தெரிந்தாலும் சபையில் அவர்களைத்தான் முன்னால் வைக்க நினைக்கிறார் கயலின் அம்மா... ஆனால் அவர்களை கூப்பிடவே கூடாது என்று நினைக்கிறாள் கயல். எந்த சிக்கலும் இல்லாமல் தேவியின் கல்யாணத்தை நடத்துவாளா? அண்ணனால் வரப்போகும் புதிய பிரச்சினை எப்படி எதிர்கொள்ளப்போகிறாள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புகளோடு நகர்கிறது கயல் சீரியல்.

அடுத்த செய்தி